search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஸ்ஜித் கருணை பள்ளி"

    • கீழக்கரை வடக்கு தெருவில் மஸ்ஜித் கருணை பள்ளி திறக்கப்பட்டது..
    • சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபைக்கு பாத்தியப்பட்ட மஸ்ஜித் கருணை பள்ளி கட்டிடத்தை வடக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த தொழிலதிபர் அபூபக்கர் சித்தீக் தாயார் ஜைய்னுல் அரபு நினைவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு புது பொலிவுடன் கட்டப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரெத்தின முகம்மது தலைமையில், வடக்குத்தெரு ஜமாத் துணைத் தலைவரும் ராமநாதபுரம் மெர்லின் சீட் கவர் உரிமையாளருமான செல்ல வாப்பா (எ)அப்துல் ஹமீது, துணை செயலாளர் கவிஞர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் ஹுசைன் சித்தீகி தொழுகை நடத்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார். சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றி னார். வடக்குத்தெரு ஜமாஅத் மஸ்ஜித் மன்பஈ பள்ளி தலைமை இமாம் கலீல் ரஹ்மான் ஆலிம், ஜமால் ஆலிம், ஜகுபர் சாதிக், மஸ்ஜித் கருணை பள்ளி இமாம் புர்கான் ஆலிம், தெற்குத்தெரு ஜமாத் செயலாளர் சயீது இபுராஹிம், கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி முன்னாள் சேர்மன் பஷீர் அகமது, கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சுல்த்தான் சம்சூல் கபீர், மக்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், கீழக்கரை நகர் மன்ற உறுப் பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×