என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "இந்திரா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்"
- இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
- பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக மாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமரும் இரும்பு பெண்மணி என அனைவ ராலும் போற்றப்படும் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமையில் பழையப்பேட்டை ஆட்டோ நிறுத்தும் இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக மாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்திரி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், எஸ்.சி. எஸ்.டி. மாநில பெறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னால் நகர தலைவர் முபாரக், மாநில பொதுசெயலாளர் ஹரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊடக பிரிவு கமலகண்ணன், பிலால் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.