search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "500 கிலோ"

    • வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்
    • தக்கலை வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனை

    கன்னியாகுமரி:

    தக்கலை வட்டவழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பரைகோடு வழியாக ஒரு சொகுசு வேன் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வேனை தடுத்து நிறுத்திய போது நிற்காமல் வேக மாக சென்றது. உடனே அதிகாரிகள் பின் தொடர்ந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று சுவாமி யார்மடம் பகுதியில் மடக்கி பிடித்தனர். உடனே வேன் டிரைவர் சம்பவ இடத்தில் வாகனத்தினை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

    பின்னர் வாகனத்தினை சோதனை செய்த போது அதில் மீன் வைக்கும் பெட்டிகளை அடுக்கி அதன் அடிப்பகுதியில் நூதன முறையில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி கடத்துவதற்கு ஏதுவாக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து வாகனத்துடன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    பறிமுதல் செய்த வேனை தக்கலை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. இது தொடர்பாக போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.

    நேற்று தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் பரசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு ஜீப் வேகமாக வந்தது.

    அந்த ஜீப்பினை நிறுத்தும்படி அதிகாரிகள் கை காட்டினர். ஆனால் ஜீப் நிற்காமல் சென்றது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் விரட்டிச் சென்று ஜீப்பை மடக்கினர். அப்போது ஜீப்பை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதனை தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் மற்றும் ஊழியர்கள் ஜீப்பை சோதனை செய்தனர். அப்போது ஜீப்பில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.

    இதையடுத்து வாகனத்து டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கபட்டது. ஜீப் வட்ட வழங்கல் அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது

    ×