என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புயல் வலுவிழந்தது"
- புயல் வலுவிழந்தததால் 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
- மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.
ராமேசுவரம்
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டல சுழற்சி புயலாக மாறியது. இதனால் ஆழ்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. அதனுடைய தாக்கம் காரணமாக தமிழக கடலோரப்பகுதியில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
பாம்பனில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ராமேசுவரம் மண்டபம், பாம்பன் ஆகிய கடலோரப்பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. விசைப்படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தவும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி விசைப்படகுகள் தரையில் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து புயலின் தாக்கம் குறைந்ததால் 5 நாட்களுக்கு பிறகு இன்று (23-ந் தேதி) காலையில் மீனவர்கள் மீன் பிடிக்கசெல்ல மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் ராமேசுவரம் மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு படகுகளில் மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக் கொண்டு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
ராமேசுவரம் பகுதியில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்