என் மலர்
நீங்கள் தேடியது "வங்காள தேசம் இந்தியா தொடர்"
- இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22-ந் தேதி தொடங்குகிறது.
- முதல் போட்டியில் காயம் அடைந்த எபாடட் ஹொசைன் இந்தப்போட்டியில் இடம் பெறவில்லை.
டாக்கா:
வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தப்போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் காயம் அடைந்த எபாடட் ஹொசைன் இந்தப்போட்டியில் இடம் பெறவில்லை. முதல் போட்டியில் இடம் பெறாத சுழற்பந்துவீச்சாளர் நசும் அகமது இந்த ஆட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி விவரம்:-
மக்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், எஊருல் ஹசன், மெகதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், தஸ்கின் அகமது, கலீத் அகமது, ஜாகீர் ஹசன், ரெஜாவூர் ரஹ்மான் ராஜா, நசும் அகமது.
- ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- வங்காள தேசம் தரப்பில் தஜிஜுல் இஸ்லாம் மற்றும் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது.
2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய வங்காளதேசம் 73.5 ஓவர்களில் 227 ரன்னில் சுருண்டது. மொமினுல் ஹக் அதிகபட்சமாக 84 ரன் எடுத்தார். உமேஷ் யாதவ் , அஸ்வின் தலா 4 விக்கெட்டும் , ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் 3 ரன்னும், சுப்மன் கில் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 208 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது.
தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். போட்டி தொடங்கிய 6-வது ஓவரில் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆட்டம் இழந்தார். அவர் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அப்போது ஸ்கோர் 27 ஆக இருந்தது. அவரது விக்கெட்டை தஜிஜுல் இஸ்லாம் கைப்பற்றினார்.
அதற்கு அடுத்த 2-வது ஓவரில் இந்திய அணியின் 2-வது விக்கெட் சரிந்தது. சுப்மன்கில் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட்டையும் தஜிஜுல் இஸ்லாம் தான் வீழ்த்தினார்.
15.1 ஓவரில் இந்திய அணி 38 ரன்னில் 2 விக்கெட் இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு புஜாரா-விராட்கோலி ஜோடி ஆடியது. 18.2 ஓவரில் இந்தியா 50 ரன்னை தொட்டது. இந்த ஜோடியையும் தஜிஜூல் இஸ்லாம் பிரித்தார். புஜாரா 24 ரன்னிலும் விராட் கோலி 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணியின் ரன்னின் எண்ணிக்கை 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் இருந்தது.
இதனையடுத்து ரிஷப் பண்ட்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 100 ரன் பார்டர்ஷிப் கொடுத்தது. சிறப்பாக ஆடிய இருவரும் சதம் அடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அக்ஷர் படேல் 4 ரன்னில் வெளியேறினார்.
தற்போது அஸ்வின் - உனத்கட் ஜோடி நிதானமாக ஆடி வருகிறது. இந்திய அணி 83 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. வங்காள தேசம் தரப்பில் தஜிஜுல் இஸ்லாம் மற்றும் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
- டெஸ்ட் போட்டிகளில் 7,000 ரன்கள் எடுத்துள்ள புஜாரா பிராட்மேனை முந்தினார்.
- புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்தார்.
மிர்பூர்:
இந்தியா, வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்காளதேசம் 73.5 ஓவரில் 227 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் , அஸ்வின் தலா 4 விக்கெட்டும் , ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
அடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 10 ரன்னில் அவுட்டானார். ஷுப்மான் கில் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். புஜாரா 24 ரன், விராட் கோலி 24 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து ஆடிய ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் பண்ட் 93 ரன்னிலும் ஷ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 2-ம் நாள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.
வங்காள தேசம் சார்பில் தஜிஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், புஜாரா நேற்று 12வது ரன் எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7000 ரன்கள் கடந்த வீரர்களில் பிராட்மேனை முந்தினார்.
பிராட்மேன் 6,996 ரன்க்ள் எடுத்துள்ளார். மேலும் 7,000 ரன்கள் கடந்த 7வது இந்திய வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்துள்ளார்.
- ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்பிஎன்சிஎஸ்) நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் பேட்டர் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளனர்.இதனால் இந்திய அணி அனுபவமில்லாத பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.
இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டு உள்ள இந்திய அணி பின்வருமாறு:-
இந்திய டி20 அணி:-
ஹர்மன்ப்ரீத் கவுர் (சி),ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், மேகனா, மேகனா பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பாரெட்டி, மின்னு மணி.
இந்திய ஒருநாள் அணி:-
ஹர்மன்ப்ரீத் கவுர் (சி), ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி ,அமன்ஜோத் கவுர், பிரியா புனியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பரெட்டி, சினே ராணா. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி வரும் 9-தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது.
- வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மிர்புர்:
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடி களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்திய அணி 33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. மந்தனா 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷஃபாலி வர்மா 19 ரன்னிலும் அடுத்து வந்த கேப்டன் கவூர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.
33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா அடுத்த ஒரு ரன் எடுப்பதற்க்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சிறிது நேரம் தாக்குபிடித்த இந்திய அணி 48 ரன்னில் (யாஸ்திகா பாட்டியா 11 ரன்) 4-வது விக்கெட்டையும் 58 ரன்னில் (ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்) 5-வது விக்கெட்டையும் இழந்தது. 61 ரன்னில் 6-வது விக்கெட்டையும் (ஹர்லீன் தியோல் 6) இந்திய அணி இழந்தது.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது.
- வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது.
மிர்புர்:
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் மந்தனா 13 ரன், ஷபாலி வர்மா 19 ரன், அடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 0 ரன், யாஷ்டிகா பாடியா 11 ரன், ஹார்லீன் தியோல் 6 ரன், தீப்தி சர்மா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச பெண்கள் அணி ஆடியது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் கேப்டன் மட்டுமே இரண்டு இலக்க ரன்னை எட்டினார். மற்ற வீராங்கனை சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
- வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம்.
- கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது.
வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அதன் மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி வரலாறு படைத்தது.
இந்த நிலையில் வங்காள தேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது சவாலானது. பாகிஸ்தானில் வங்காள தேசம் நன்றாக விளையாடியது. ஆனால் வங்காள தேசத்தை வீழ்த்து வதற்கு இந்தியாவுக்கு அதிக சிரமம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
இந்த தொடருக்கு வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம். இது வங்காளதேசத்துக்கு எதிராக உதவும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்கு உதவும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.
கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர். அவர் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரை இனி பகுதி நேர விக்கெட் கீப்பர் என்று அழைப்பது நியாயம் என்று நான் நினைக்கவில்லை. இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.