என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்களைத் தேடி மருத்துவம்"
- மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார்.
- முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார்.
சென்னை:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், 'மக்களைத் தேடி மருத்துவம்'. இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கிவைத்தார். தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பெண்களின் சுயமரியாதையை காக்கவும், அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார். முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்றவர்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.
பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களை கேட்டறிந்த முதலமைச்சர், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா, எந்த தேதியில் பணம் வருகிறது, எவ்வளவு தொகை வருகிறது, எந்த வகையாக வந்தடைகிறது, ஏதேனும் குறை உள்ளதா, அலுவலகத்தில் அதிகாரிகள் நன்றாக நடத்துகொள்கிறார்களா? என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருந்துகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,60,122 நோயாளிகள் கண்டறி ப்பட்டு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசிய மான சுகாதாரச் சேவைகள் வழங்க ப்படும்.
மக்களை த்தேடி மருத்துவம் திட்ட த்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள்,
இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பரா மரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சமுதாய நலப்பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படு த்துகிறார்கள்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று மருந்துகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் இதுவரை 31,540 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 14,956 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்க ப்பட்டுள்ளதாக 14,701 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் 15,932 நோயாளி களுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 11,933 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் 4 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் மட்டும் 89,066 நோயாளிகள் கண்டறியப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பழனி சுகாதார மாவட்டத்தில் 30,184 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 13,070 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 13,786 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் 7,208 நோயாளி களுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 6,856 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களு க்குத் தேவையான நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் இதுவரை பழனி சுகாதார மாவட்ட த்தில் மட்டும் 71,056 நோயாளிகள் கண்டறிய ப்பட்டு, மருந்து, மாத்திரை கள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை, 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் பரிசோதனை மூலமாக 61,674 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 28,026 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 28,484 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் முதுகு தண்டுவடம் செயலிழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளி களை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கெ ன வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசியோ தெரபிஸ்ட் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,60,122 நோயாளிகள் கண்டறி ப்பட்டு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்