என் மலர்
நீங்கள் தேடியது "மர்காஷியஸ் பள்ளி"
- பாலாஜிக்கு அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை கால்நடை மருத்துவப் பிரிவில் இடம் கிடைத்துள்ளது.
- மாணவர் பாலாஜியை தாளாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
நாசரேத்:
நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படி ப்பில் வேளாண்மைத் தொழிற் கல்வி பிரிவில் பயின்ற மாணவர் பாலாஜி. இவருக்கு சேலம் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மதிப்பெண் தகுதி அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை கால்நடை மருத்துவப் பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக மாணவர் பாலாஜியையும், பயிற்றுவித்த வகுப்பு ஆசிரியர்கள் ஜெய்சன் சாமுவேல், ஜெய்சன் பாபு ஆகியோரையும், தாளாளர் எஸ்.சுதாகர், தலைமையாசிரியர் வி.ஜெபகரன் பிரேம்குமார் மற்றும் ஆட்சி மன்ற குழுத்தலைவர் மர்காஷிஸ் டேவிட்வெஸ்லி, ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நாசரேத் நகர மக்கள் பாராட்டினர்.