search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாற்று நடும் போராட்டம்"

    • குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.
    • சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் 7-வது வார்டு குறுக்கு தெரு, நடுத்தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.

    இதனால் இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.

    சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சேரும் சகதியமாக உள்ள இந்த தெருவில் நெல் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். இந்த சாலையை சீரமைக்கவிட்டால் அதிகாரிகளை கண்டித்து அடுத்த கட்டமாக மீன் பிடிக்கும் போராட்டம், நீச்சல் அடிக்கும் போராட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

    • சாலை குண்டும், குழியுமாக உள்ளது
    • ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை

    வேலூர்:

    காட்பாடி அடுத்துள்ள 66 புதூர் கிராமத்துக்கு சாலை வசதி கோரி தேங்கிய மழைநீரில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 புதூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாய தொழிலை மட்டுமே நம்பியுள் ளனர். அங்குள்ள பஜனை கோவில் தெரு உள்ளிட்ட சில தெருக்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கப்படவில்லை.

    மேலும், கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

    இது தொடர்பாக கிராம ஊராட்சி மற்றும் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கடுவில்லை என கூறப்படுகிறது.

    இதற்கிடையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிராமத்துக்கு செல்லும் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதி ஏற்பட்டது.

    இதனால் அதிருப்தியடைந்த 66 புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நேற்று நூதன போராட்டத்தில் பட்டனர்.

    அப்போது எங்கள் கிராமத்துக்கு விைரவில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும்.

    இல்லாவிட்டால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்ப டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சியில் நீண்ட நாட்க ளாக சாலைகள் சேறும் சகதியமாக குண்டும் குழியு மாக இருந்து வருகிறது மேலும் கிராம அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கள் நாற்று நடும் போரா ட்டம் நடத்த திரண்டனர். தகவல் அறிந்த நாற்று நடும் போராட்டம் நடத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சுவார்த்தையில் முடிவில் விரைவில் சாலை வசதி, சைடு வாய்க்கால் வசதி, கிராமங்களில் உள்ள சிறு பாலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்ப டும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர். அதிகா ரிகளின் பேச்சு வார்த்தை யை தொடர்ந்து தற்காலிக மாக போராட்ட த்தை கை விட்டு மார்க்சி ஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.

    ×