search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2-ம் நிலை காவலர்"

    • சிவகங்கையில் 2-ம் நிலை காவலர் தேர்வு பயிற்சி வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.
    • இத்தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 17-ந்தேதி கடைசி நாளாகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியத் தால் 2-ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ் நாடு சிறப்பு காவல்படை) 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 359 காலிப்பணி யிடங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந்தேதி முதல் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற உள்ளது.

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 17-ந்தேதி கடைசி நாளாகும். இணைய வழி விண்ணப்பம் செய்ய www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க பயன்படுத்தி கொள்ளவும்.

    இலவச பயிற்சி வகுப்பு களில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் போட்டி தேர்வு களுக்கு தயாராகும் இளைஞர்கள் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • மதுரை-12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு; 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
    • தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.



    தேர்வர்களின் செல்போன்களை ேபாலீசார் வாங்கி வைத்து கொண்டனர்.(இடம்: அமெரிக்கன் கல்லூரி).

     .............

    மதுரை

    தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இதையடுத்து எழுத்து தேர்வு இன்று காலை தொடங்கியது.

    இதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, யாதவா ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி, திருப்பரங்குன்றம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 பகுதிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இங்கு 11 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள். எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாகவே தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி விண்ணப்ப தாரர்கள் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வந்து விட்டனர். அவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு மையத்துக்குள் கருப்பு அல்லது நீலநிற பந்து முனை பேனா, நுழைவுசீட்டு தவிர வேறு எந்த பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் கொண்டு வந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

    மதுரை மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கும் 12 மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    திருமங்கலம் வி.கே.என். மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களிலும் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×