என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ருதுராஜ் கெய்க்வாட்"

    • சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.

    கவுகாத்தி:

    கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:

    நாங்கள் நல்ல தொடக்கங்களைப் பெறவில்லை. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றவுடன், விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும்.

    நாங்கள் தவறான களங்கள் மூலம் 8-10 கூடுதல் ரன்களை விட்டுக்கொடுத்தோம். அதை நாங்கள் மேம்படுத்த வேண்டும்.

    பல ஆண்டுகளாக அஜிங்க்யா 3வது இடத்தில் பேட்டிங் செய்தார், ராயுடு மிடில் ஓவர்களைக் கையாண்டார். நான் பின்னர் வந்தால் நிலைமையை சீராக்க முடியும் என நாங்கள் நினைத்தோம். அதே நேரத்தில் திரிபாதி முன்கூட்டியே அடிக முடியும்.

    இது ஏலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எப்படியிருந்தாலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் ஆரம்பத்தில் பேட்டிங் செய்யத் தொடங்குகிறேன் என தெரிவித்தார்.

    • நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
    • வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.

    மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.

    இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.

    இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.

    கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.

    என தோனி கூறினார்.

    • ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது ஆகிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
    • கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, சாம் கர்ரன் வேகப்பந்து வீச்சில் முன்னணியில் இருக்க வாய்ப்புள்ளது.

    பேட்ஸ்மேன்கள்

    ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷெய்க் ரஷீத், வான்ஸ் பெடி, அந்த்ரே சித்தார்த்

    ஆல்-ரவுண்டர்கள்

    ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், விஜய் சங்கர், சாம் கர்ரன், அன்ஷுல் காம்போஜ், தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ரவீந்திரா ஜடேஜா, ஷிவம் துபே

    பந்து வீச்சாளர்கள்

    கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜாப்நீட் சிங், நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், மதீஷா பதிரனா.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. ரச்சின் ரவீந்திரா சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றார். கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த ஜோடியை சிஎஸ்கே மாற்றாது. ஒருவேளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் டேவன் கான்வே களம் இறக்கப்படலாம்.

    மிடில் ஆர்டர் வரிசை

    ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கக்கூடிய வீரராக உள்ளனர். ஷெய்க் ரஷீத், வான்ஷ் பெடி, அந்த்ரே சித்தார்த் ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் அனுபவம் கிடையாது. இதனால் அணி நிர்வாகம் சில போட்டிகளில் களம் இறக்கி பரிசோதித்து பார்க்குமா? என்பது சந்தேகம்தான்.

    ஆல்-ரவுண்டர்களான விஜய் சங்கர், ஜடேஜா, அஸ்வின், சாம் கர்ரன் மிடில் ஆர்டர் வரிசையில் கைக்கொடுக்க உள்ளனர். எம்.எஸ். டோனி கடைசி நேரத்தில் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.

    வேகப்பந்து வீச்சு

    கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, சாம் கர்ரன் ஆகியோர் முதன்மை வகிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பதிரனாவுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் நாதன் எல்லீஸ் அல்லது ஓவர்டன் சேர்க்கப்படலாம். அதேபோல் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி சிறப்பாக விளையாடவில்லை என்றால் குர்ஜாப்நீட் சீங், அன்ஷுல் கம்போஜ், ராமகிருஷ்ணா கோஷ், கம்லேஷ் நகர்கோட்டி விளையாட வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் ஷிவம் துபேயை மிதவேக பந்து வீச்சாளராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

    சுழற்பந்து வீச்சாளர்கள்

    ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது ஆகியோர் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களுடன் ஷ்ரேயாஸ் கோபால், தீபக் ஹூடா, ரச்சின் ரவிந்திரா ஆகியோர் உள்ளார். தீபக் ஹூடா, ரச்சின் ரவிந்திரா இருவரை பேட்டிங் உடன் பந்து வீச்சுக்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

    வெளிநாட்டு வீரர்கள்

    டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன், ஜேமி ஓவர்ட்டன், நூர் அகமது, நாதன் எல்லிஸ், பதிரனா ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்களில் ரவீந்திரா, பதிரானா, நூர் அகமது, சாம் கர்ரன் ஆடும் லெவனில் விளையாட வாய்ப்புள்ளது.

    • சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

    எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் மகாரஷ்டிரா அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்கள் குவித்தார்.
    • இந்த போட்டியில் அவர் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் விளாசினார்.

    விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

    இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். அதில் 43 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது.

    • தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா, சுப்மன் கில், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் வேறு இருக்கிறார்.
    • மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

    நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 9 சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார். ஆனாலும் அவர் இடம்பெற்ற மகாராஷ்டிரா அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்படி ரன்கள் மேல் ரன்கள் சாதனை மேல் சாதனைகள் படைத்து கேப்டனாக தனது அணியை ஃபைனல் வரை அழைத்து சென்றும் கோப்பை வெல்ல முடியாத அவரது ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. அதே சமயம் இந்த தொடர்ச்சியான ஆட்டத்தால் டோனிக்கு பின் ஐபிஎல் தொடரில் சென்னையின் கேப்டனாக ருதுராஜ் வரவேண்டும் என்று விரும்பும் சென்னை ரசிகர்கள் இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

    ஆனாலும் கடுமையான போட்டி நிறைந்த இந்திய அணியில் யாருக்கு பதில் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு பெறுவார் என்று தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் காரணமாகவே தற்சமயத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும் யாருக்கு பதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்? யாருக்கு பதில் என்பதை விட அவர் யாருடன் போட்டி போடுகிறார் என்பதை பாருங்கள். ஷிகர் தவான், ரோஹித் சர்மா, சுப்மன் கில் இவர்களுடன் ரிஷப் பண்ட்டும் ஓப்பனிங்கில் களமிறங்குகிறார். மேலும் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு மிகவும் கடினமான ஒரு நாடாகும்.

    • ஏற்கனவே கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தார்.
    • மகராஷ்டிரா - ஹைதராபாத் அணிகள் மோதிய ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் 8, 0 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்காக இந்திய அணி சேர்க்கப்பட்டுள்ள இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    இந்த தொடருக்கு முன்னதாக மகராஷ்டிரா - ஹைதராபாத் அணிகள் மோதிய ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் 8, 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டிக்கு பின்னர் அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

    காயம் காரணமாக ஏற்கனவே கடந்த ஆண்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அணியில் இடம் கிடைத்திருக்கும் இந்த சூழலில் மீண்டும் அவர் வாய்ப்பை இழக்கிறார். 

    • அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
    • இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம்.

    ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதனையொட்டி டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாள்தோறும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 41 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடருடன் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே விளையாடப்போகும் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த அறிவிப்பை டோனி வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

    அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இளம் வீரரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். ருதுராஜ் உங்களின் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு என்னுயை வாழ்த்துகள்.

    என தெரிவித்துள்ளார்.

    ருதுராஜ் கெய்க்வாட் 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் அவர் 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை பெற்றிருந்தார். அந்த சீசனில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களை சிஎஸ்கே அணிக்காக விளாசினார்.

    • டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது.
    • உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

    கடந்த முறை சிஎஸ்கே அணி ஒன்பதாவது இடத்தை பிடித்ததால் இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

    இதனால் இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடததுதான் காரணம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பதாவது:-


    நாம் டி20 உலக கோப்பையை பார்த்திருக்கிறோம். அதில் பென் ஸ்டோக்ஸ் சில பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன் பிறகு தான் அதிரடியை தொடங்கினார். அவர் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் இறங்கி இருக்கிறார்.

    பென் ஸ்டோக்ஸ் அடித்த சதம் அவர் பேட்டிங் ஆர்டரின் முன் வரிசையில் இறங்கும்போதுதான் நடந்திருக்கிறது. எனினும் இம்முறை சென்னை அணி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உத்தப்பாவுக்கு மாற்று வீரர்களை தேடி வருகிறார்கள் என கருதுகிறேன். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மெதுவாக இன்னிங்சை தொடங்கி அதன் பிறகு தான் வேகத்தை கூட்டுவார்.

    ஆனால் இம்முறை அப்படி விளையாட கூடாது. அதற்கான சூழலும் இல்லை. டீசல் இன்ஜின் காலமெல்லாம் முடிந்து விட்டது. இப்போதெல்லாம் மின்சாரத்தில் தான் அனைத்து வாகனங்களும் ஓடுகிறது. எனவே ருதுராஜ் வேகத்தை அதிகரிக்கக்கூடிய மின்சார வாகனம் போல் இருக்க வேண்டும்.

    என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ருத்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு சீசன்னில் 635 ரன்கள் அடித்திருந்து அசத்தினார். மேலும் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ருத்ராஜ் 368 ரன்கள் அடித்தார்.

    • இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான அவர் ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரே லியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது.

    இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக ஜெய்ஷ்வால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான அவர் ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    • திருமணத்திற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகல்
    • ருதுராஜ் கெய்க்வாட் மனைவியும் கிரிக்கெட் வீராங்கனை ஆவார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளார்.

    சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். டோனியின் நம்பிக்கைக்குரிய ஒரு வீரராக திகழ்கிறார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்தது.

    7-ந்தேதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் திருமணம் செய்ய இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டார். பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற்றது. உட்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உட்கர்ஸ பவார் கிரிக்கெட் வீராங்கனை என்பதை குறிப்பிடத்தக்கது.

    • உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுவதால் 2-வது கட்ட வீரர்களே அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    • இந்தியாவுக்காக ஆடுவது உண்மையிலேயே பெருமையான உணர்வாகும்.

    மும்பை:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சமீபத்தில் அறிவித்தது.

    உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுவதால் 2-வது கட்ட வீரர்களே அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணியின் கேப்டனாக சி.எஸ்.கே.வின் தொடக்க வீரரும், நம்பிக்கை நட்சத்திரமுமான ருதுராஜ் கெய்க் வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம்துபே, ஜிதேஷ்சர்மா, வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஸ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மவி, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற்று உள்ளனர். யாஷ் தாக்கூர், சாய்கிஷோர், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, சாய் சுதர்ஷன் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட் டுப் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படு வதை உறுதி செய்வதே எனது நோக்கமாகும்.

    எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சிறப்பானதாக கருதுகிறேன். ஆசிய விளையாட்டு போட்டியில் நாட்டிற்காக பதக்கம் வெல்வதில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகம் அளிக்கும். இந்தியாவுக்காக ஆடுவது உண்மையிலேயே பெருமையான உணர்வாகும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    ×