search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ருதுராஜ் கெய்க்வாட்"

    • மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார்.
    • 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தார்.

    துலீப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது.

    அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா டி அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்தியா சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது.

    2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா டி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    இப்போட்டி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார். இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்ததை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
    • ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொடரில் ருதுராஜ் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்பாப்வே தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் ஒரு அரை சதம் மற்றும் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாததை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியிருந்தார்.

    அதேபோல் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், "ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 என்ற அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் மேல் ரன்கள் அடித்துள்ளார். ஆனாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட்கோலி , ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர்.

    ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும்.

    கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது அவசியமாகிறது. அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல" என்று காட்டமாக பேசியுள்ளார்.

    • இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் (ஒருநாள்) ஆகியோர் இடம் பெறவில்லை.
    • சாம்சன் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

    இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20-யும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

    இதற்கான டி20 அணியையும் ஒருநாள் அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தேர்வுக்கு லோக் சபா எம்.பி.யும் கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் சுவாரசியமான அணி தேர்வு. சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    அதேபோல அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே தொடரில் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தவர். அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. எப்படியும் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

    இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய டி20 அணி:

    சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

    இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • ருதுராஜ், குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
    • சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஜடேஜா, குல்தீப் யாதவ், ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன்(ஒருநாள் தொடரில்) ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ், ஜடேஜா உலகக் கோப்பையில் விளையாடினர். அதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பதற்காக கூட அவர்கள் அணியில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ், சாம்சன் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அபிஷேக் சர்மா ஒரு சதம் விளாசினார். ருதுராஜ் 3 போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார். இதை தவிர சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை.

    இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை வருவார் செல்வார் என்பது போலவே இருக்கும். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியில் இடம்பெறுவார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறமாட்டார். அப்படி அணியில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதற்கு அடுத்த தொடரில் அவர் இடம் பெறமாட்டார். இப்படி தான் இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை நகர்கிறது. அந்த வகையில் தற்போதும் அவரை கழற்றி விட்டுள்ளனர்.

    நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் இந்திய அணியில் சாம்சன் இடம் பிடித்தார். தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடி சதமும் அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் அவர் இடம் பெறவில்லை. தற்போதும் அவரும் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 அணி விவரம் பின்வருமாறு:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

    ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை.
    • அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    இதனால் சுப்மன்கில் கேப்டன்ஷிப் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து நடந்த 4 டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் வெளிநாடுகளில் தொடர்ந்து 4 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் அவருக்கு கேப்டன்ஷிப் பன்ன தெரியாது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை. அது பற்றி எந்த யோசனையும் இல்லை. அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை. அவர் எதுக்கு கேப்டனாக நியமிக்கபட்டார் என்பது குறித்து தேர்வாளர்களை தான் கேட்க வேண்டும்.

    கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்திய அணிக்காக டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். பேட்டராக சிறப்பாக செயல்படுகிறார். எனவே பேட்டராக தகுதியானவர்.

    அவருக்கு கேப்டன் பதவியை வழங்கியது, அணி நிர்வாகம் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்க விரும்பியதால் தான் என்று நினைக்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரை சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர். யாராவது சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் சுப்மன் கில் அல்லது அது போன்ற எதையும் வெறுப்பவன் அல்ல, எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் ருதுராஜ் கடினமான சூழ்நிலையில் ரன்களை எடுத்ததால் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.

    டி20 உலகக் கோப்பையில் ருதுராஜ் ஒரு பேக்அப் பிளேயராக இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு முழுமையான வீரர். அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் - அவருடைய நுட்பம் அப்படிப்பட்டது. அவருடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கிறது.

    இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 821 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை இன்று ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ருதுராஜ் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 77 குவித்ததன் மூலம் 13 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 821 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் (755 புள்ளி) முகமது ரிஸ்வான் (746 புள்ளி) உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் பின்தங்கி 646 புள்ளிகள் பெற்று 11-வது இடம் பிடித்துள்ளார்.

    • காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே வர முடியாமல் போனது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.
    • வீரர்கள் காயமடையும் போது, ஒவ்வொரு ஆட்டத்திலும் சரியான கலவையில் அணியை தேர்வு செய்வது கடினமாகி விடும்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து தொடர்ச்சியாக 6-வது வெற்றியை பெற்றதுடன் அடுத்து சுற்றுக்கும் (பிளே-ஆப்) முன்னேறியது. இதில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (54 ரன், 39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), விராட் கோலி (47 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோரது அதிரடியுடன் பெங்களூரு நிர்ணயித்த 219 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுத்தது.

    சென்னை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய 4 அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்ற போதிலும் பெங்களூரு ரன்ரேட்டில் முந்தியது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

    தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், 'ஆடுகளம் நன்றாகவே இருந்தது. பந்து சற்று நின்று வந்தது. என்றாலும் 200 ரன் என்பது எட்டக்கூடியவை தான். சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்ததால் இலக்கை விரட்டிப்பிடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் சில பந்துகளை அடிக்க முடியாதது குறித்து கேட்கிறீர்கள். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். கடந்த ஆண்டு எங்களது கடைசி நாக்-அவுட் போட்டியை போலவே 2 பந்தில் 10 ரன் தேவை என்ற சூழல் உருவானது. ஆனால் இந்த தடவை நினைத்த மாதிரி முடிவு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

    இந்த சீசனை எடுத்துக் கொண்டால் 14 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சியே. என்றாலும் இந்த ஆண்டில் முதல் ஆட்டத்தில் இருந்தே நிறைய சவால்களை சந்தித்தோம். 3 முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவாகிப் போனது. காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே வர முடியாமல் போனது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா (6 ஆட்டத்தில்13 விக்கெட்) காயமடைந்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் (9 ஆட்டத்தில் 14 விக்கெட்) சர்வதேச போட்டிக்காக தாயகம் திரும்பியதால் கடைசி கட்டத்தில் அவரை தவற விட்டோம். வீரர்கள் காயமடையும் போது, ஒவ்வொரு ஆட்டத்திலும் சரியான கலவையில் அணியை தேர்வு செய்வது கடினமாகி விடும்' என்றார்.

    • குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்தது.
    • சிஎஸ்கே 196 ரன்கள் அடித்து 35 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத்தை மீண்டும் ஒரு முறை வீழ்த்தி சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் முதலில் விளையாடிய குஜராத் அணி சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரின் சதங்களால் 231 ரன்கள் குவித்து விட்டது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    எங்கள் பீல்டிங் எங்களை வீழ்த்தியது, நாங்கள் கூடுதலாக 10-15 ரன்களை கொடுத்தோம். திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் நன்றாக இருந்தோம், ஆனால் அவர்கள் சில நல்ல ஷாட்களை விளையாடினர். பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி, சிறப்பாக நிலையில் சென்று கொண்டிருக்கும்போது உங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.

    இது மிகவும் விரைவானது (சென்னையில் நடைபெறும் போட்டி குறித்து). நாங்கள் விரைவாக சென்னைக்கு செல்ல வேண்டும். சென்னையில் எங்களுக்கு ஒரு கடினமான ஆட்டம் உள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் மாற வேண்டும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

    நாளை சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே விளையாட இருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் போட்டி இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது சென்னை அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. பல கேட்ச்களை தவறவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
    • குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.

    பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.

    துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.

    சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.

    • பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம்.
    • இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இன்றைய வெற்றியின் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் சந்தித்த தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலடி கொடுத்துள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பந்துவீசி அசத்திய சிமர்ஜித் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    "பிட்ச் ஸ்லோவாக இருந்ததை அனைவரும் நம்பினர். எனினும், பேட்டிங்கில் 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்க முயற்சித்தோம். பிறகு, துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்த சமயத்தில் 160 முதல் 170 வரை அடித்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம்."

    "சிமர்ஜித் சிங்கிற்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் இதுவும் தாமதம் இல்லை. நாங்கள் இம்பேக்ட் வீரராக பேட்டரை களமிறக்க நினைத்தோம், ஆனால் சிமர்ஜித் சிங் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என நம்பிக்கை இருந்தது," என்று தெரிவித்தார்.

    • தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.
    • பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. முந்தைய 2 ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்து முறையே 8 விக்கெட், 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப், சாம் கர்ரன், ரபடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களில் ஆடாத கேப்டன் ஷிகர் தவான் முழு உடல் தகுதியை இன்னும் எட்டவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார்.

    தவான் கடைசி 2 லீக் ஆட்டங்களில் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர் கடந்த ஆட்டத்தில் ஆடிய அணியில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என்றும் வெற்றி கூட்டணியை தொடரவே விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

    சென்னை அணி

    நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டு 10 புள்ளி பெற்று இருக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்ட சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 509 ரன்), ஷிவம் துபே (350) அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி கணிசமான பங்களிப்பை அளித்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

    சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் நாடு திரும்பி விட்டதால் எஞ்சிய ஆட்டங்களில் ஆடமாட்டார். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது கடினம் தான். இது சென்னை அணிக்கு பின்னடைவாகும். காய்ச்சல் காரணமாக முந்தைய ஆட்டத்தில்

    ஆடாத துஷர் தேஷ்பாண்டேவும், உலகக் கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கைக்கு சென்றதால் கடந்த ஆட்டத்தை தவறவிட்ட பதிரானாவும் இந்த ஆட்டத்துக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பழி தீர்க்குமா?

    பஞ்சாப் அணியிடம் முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும்.

    அதேநேரத்தில் மும்பை இந்தியன்சுக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடை போடும் பஞ்சாப் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முழுபலத்தையும் வெளிப்படுத்தும்.

    எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னையும், 14 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங் அல்லது ராகுல் சாஹர்.

    சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, ஷர்துல் தாக்குர் அல்லது முகேஷ் சவுத்ரி, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா, பதிரானா.

    மற்றொரு ஆட்டத்தில் லக்னோ-கொல்கத்தா

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர் நல்ல பார்மில் உள்ளனர். ரிங்கு சிங்கிடம் இருந்து எதிர்பார்த்த அதிரடி இன்னும் வெளியாகவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்சித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா மிரட்டக்கூடியவர்கள். ஆல்-ரவுண்டராக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அசத்துகிறார்கள்.

    நேரடி ஒளிபரப்பு

    லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்ற கொல்கத்தா அணி அந்த ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்த ஆர்வம் காட்டும். இதேபோல் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த லக்னோ அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.

    இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • விராட் கோலி 500 ரன்கள் அடித்துள்ளார்.
    • ருதுராஜ் கெய்க்வாட் 509 ரன்கள் அடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 10 போட்டிகளில் 509 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணியின் விராட் கோலி 10 போட்டிகளில் 500 ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைவசப்படுத்தியிருந்தார்.

    இந்த போட்டியில் 62 ரன் அடித்ததன் மூலம் 509 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை விராட் கோலியுடன் இருந்து பெற்றுள்ளார்.

    சாய் சுதர்சன் 418 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கே.எல். ராகுல் 406 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் 398 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    ×