என் மலர்
நீங்கள் தேடியது "ரோந்துபணி"
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
சங்கராபுரம் அருகே போலீஸ் சப்-இ ன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலா ன போலீசார் மேலப்பட்டு, அரசம்பட்டு ஆகிய பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியின் ஒரு வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபால்(47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அரசம்பட்டு கிராமத்தை அஞ்சலை(58) என்பவர் சாராயம் விற்பனை செய்தார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் தீவிர ரோந்துபணியில்ஈடுபட்டனர்.
- தனலட்சுமி தனது வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களை விற்றார்.
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சப்இன்ஸ்பெக்டர் தங்கவேல்மற்றும் போலீசார் தீவிர ரோந்துபணியில்ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி காந்திநகர் மண்ணாங்கட்டி மனைவி தனலட்சுமி (வயது 39) என்பவர் தனது வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்களை விற்றார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்துஎரிசாராய பாக்கெட்களைபறிமுதல் செய்துபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.