என் மலர்
நீங்கள் தேடியது "மது கடை"
- போலீசார் அதிரடி நடவடிக்கை
- விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் மதுப்பாட்டில்களை முதியவர் ஒருவர் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த முதியவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொட்டாரம் கிட்டங்கி பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 62) என்பதும் அவர் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளி செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.