என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடுப்புச் சுவர்"
- கண்டுகொள்ளாத கடலோர பாதுகாப்பு குழும போலீசார்
- கன்னியாகுமரி காந்தி மண்ட பத்தின் பின்பகுதி முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை ஆழமான ஆபத்து நிறைந்த பகுதி இருப்பதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது
கன்னியாகுமரி:
கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடலில் ஆனந்த குளியல் போடு கிறார்கள். அதைத் தொடர்ந்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். இதற்கி டையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வ முடன் பயணம் செய்து பார்வையிட்டு வருகி றார்கள்.
இது தவிர கன்னியா குமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை, பொழுதுபோக்கு பூங்கா, காட்சி கோபுரம், மெழுகு சிலை கண்காட்சி வட்டக்கோட்டைபீச், சொத்த விளைபீச் போன்ற இடங்களுக்கும் சென்று பொழுதைகழிக்கிறார்கள். மாலையில் சன்செட் பாய்ண்ட் கடற்கரைக்கு சென்று சூரியன் மறையும் அற்புத காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.
இதற்கிடையில் கன்னி யாகுமரி காந்தி மண்ட பத்தின் பின்பகுதி முதல் சன்செட் பாயிண்ட் கடற்கரை வரை ஆழமான ஆபத்து நிறைந்த பகுதி இருப்பதால் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது என்பதற்காக கடற்கரையை யொட்டி பாறாங்கற்களை குவித்து தடுப்புச் சுவர்கள் அமைத்து உள்ளனர். ஆனால் சுற்றுலா பயணி கள் இந்த தடுப்புச் சுவர்க ளையும் தாண்டி கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுகிறார்கள்.
இந்தப் பகுதி பல உயிர்களை பலி வாங்கிய ஆபத்தான ஆழம் நிறைந்த பகுதி என்பதை அறியாமல் சுற்றுலா பயணி கள் ஆனந்த குளியல் போடு வதை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்டு கொள்வதில்லை.
எனவே உயிர் பலி ஆகுவ தற்கு முன்பு இந்த பகுதியில் ரோந்து செல்லும் கடலோர பாதுகாப்பு குடும்ப போலீ சார் சுற்றுலாப் பயணிகள் ஆபத்துநிறைந்த இந்த ஆழமான பகுதிக்கு சென்று கடலில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சுற்றுலா பயணி களும் சமூக ஆர்வ லர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்