என் மலர்
நீங்கள் தேடியது "மகா தீபத் திருவிழா"
- அருணாசலேசுவரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெறவுள்ளது.
- கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
விழுப்புரம்:
போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மகா தீபத் திருவிழாவும், 7-ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமி கிரிவலமும் நடைபெறவுள்ளது. இதனால், பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். அவர்களின் பஸ் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கூடுதல் பஸ்கள் விழுப்புரம் மண்டலம் சார்பில் இயக்கப்பட உள்ளன.
விழுப்புரம், திரு வண்ணாமலை வழித் தடத்தில் 317 பஸ்கள், திண்டிவனம், திருவண்ணாமலை வழித்தடத்தில் 82 பஸ்கள், புதுச்சேரி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 180 பஸ்கள், திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழித்தடத்தில் 115 பஸ்கள், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழித்தடத்தில் 200 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை ஏற்பாடு செய்திடவும், பஸ் இயக்கங்களை மேற்பார்வை செய்யவும் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
- பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தீபத் திருவிழா திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு, நாளை முதல் வரும் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி, தனியார், அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 156 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில் வருடத்திற்கு ஒருமுறை அருள்பாளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்தனர்.
- கோயில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் தங்க வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாளித்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் மலையுச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அருணாச்சலேஸ்வரர் கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
350 கிலோ எடை கொண்ட கொப்பரையில் நெய்யுடன் 300 மீட்டர் துணியாலான திரி கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.
2668 அடி உயரம் கொண்ட கோவில் மலை மீது மகா தீபத்தில் ஜோதி வடிவிலான அண்ணாமலையாரை பக்தர்கள் வழிபட்டனர்.
இதற்கிடையே, திருவண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டதால் கோயில் வளாகத்தில் அர்த்தனாரீஸ்வரர் ஒரு நிமிடம் பொதுமாடத்தை சுற்றி வந்தார்.
மகாதீபம் ஏற்றப்பட்ட நிலையில் வருடத்திற்கு ஒருமுறை அருள்பாளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மற்ற மலைக் கோவில்களிலும் தீபம் ஏற்றப்பட்டது.
கோயில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் தங்க வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள் பாளித்தார்.
மலையுச்சியில் மகாதீபம் ஏற்றும்போது கோயில் வளாகத்தில் கொடி மரத்திற்கு முன் பெரிய அகல் விளக்கிலும் தீபம் ஏற்றப்பட்டது.
அதன்படி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் 40 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
அறுபடை வீடுகளில் முதன்மையானதான திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள விநாயகர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிகர நிகழ்ச்சியாக மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதுபோன்று, திருத்தணியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.