என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி"

    • புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைப்பு.
    • 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


    வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இது வலுப்பெற்று டிசம்பர் 8ம் தேதி புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. இதனால் 8 மற்றும் 9 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    • நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும்.
    • கடலோர பகுதிகளில் மழை அளவு மிக அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது.

    இது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் மேற்கு-வடமேற்கு திசையில் மெல்ல நகா்ந்து வருகிறது.

    நாளை (புதன்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும். அந்த நிலையில் புயல் சின்னம் மேலும் வலுவாகி தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வரும்.

    இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன மழை இன்று இரவு முதல் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று 2 நாட்கள் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நீடிக்க இருப்பதால் மழை அளவு மிக அதிகமாக இருக்கும்.

    நாளை (புதன்கிழமை) வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று அதிக மழையை கொண்டு வரும். இதன் காரணமாக வட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டால் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே சென்னையில் நாளை பல பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, தமிழக பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலி லும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.

    அதேபோல் அரபிக் கட லில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஓமன் கடற் கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. அது ஓமன் கடற்கரையை அடைந்ததும் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்திய பகுதி களில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்தகைய வானிலை அமைப்புகளாலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசுவதாலும், நாளை அல்லது மறுநாள் தென்னிந்திய பகுதி களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்.

    மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மின்பிடிக்க செல்வதை தவிா்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இனிவரும் நாட்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும். வழக்கமாக மழை காலங்களில் பெய்வது போலத்தான் நிகழாண்டும் மழை பெய்யும்.

    ஆகையால் இதை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அவரவா் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாட்டு பணிகளைத் திட்ட மிட்டுக்கொள்ளுங்கள்.

    சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளதால், சென்னை முழுவதும் 200 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்பது அா்த்தம் கிடையாது.

    சென்னையில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும், சில பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று (செவ்வாய்க் கிழமை) திருவாரூா், நாகப் பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திருவள்ளூா், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (புதன்கிழமை) ராணிப்பேட்டை, திருவண் ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்க ளிலும், நாளை மறுநாள் (17-ந்தேதி) திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் நாளை (புதன்கிழமை) திருவள்ளூா், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயி லாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை (204 மில்லி மீட்டருக்கும் அதிகம்) பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும், நாளை சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு இருப்பதால் இந்த 4 மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும். இதை கருத்தில் கொண்டு 4 மாவட்டங்களிலும் மீட்பு படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதிப்புக்கு ஏற்ப உடனுக்குடன் உதவிகள் செய்ய அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். 4 மாவட்டங்களிலும் 1,200 இடங்களில் நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

    4 மாவட்டங்களிலும் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களை வெளியேற்ற பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர். குடியிருப்புகளை வெள்ளம் சூழம்பட்சத்தில் மக்களை வெளியேற்ற படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தெருக்களில் தேங்கும் மழை தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற 900 இடங்களில் மோட்டார் பம்ப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மரங்களை வெட்டி அகற்றும் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் ஆங்காங்கே வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட டிராக்டர்களும், பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னையில் நாளை அதிக கன மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி வெள்ளம் தேங்கும்பட்சத் தில் உணவு வழங்கவும் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 300 இடங்களில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    உணவு வழங்கவும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்யவும் சென்னை மாநகராட்சியில் 16 ஆயிரம் தன்னார்வல தொண்டர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த 16 ஆயிரம் தன்னார்வல தொண்டர்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படுவார்கள் என்று குறிப்பிடத்தக்கது.

    • 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.
    • சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை, இந்திய பெருங்கடலின் மத்திய பகுதிகளில் இன்று காலை 5.30 மணி அளவில் நிலை கொண்டது.

    இது மேலும் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 8.30 மணியளவில் வலுவடைந்தது. இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலையில் இருந்து மழை தொடங்கும். இன்று முதல் 27-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

    28 மற்றும் 29-ந்தேதிகளில் ஒருசில மாவட்டங்க ளில் கன மழை பெய்யும். 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்று பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது.
    • தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்த நிலையில் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது.

    கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வரும் 30ம் தேதி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

    தற்காலிக புயலாக மாறும் எனத் தெரிவித்த நிலையில் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.
    • தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் தகவல்.

    தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் தாக்கத்தால் அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.

    நாளை அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வடமேற்கில் நகரும். எதிர்பார்த்ததை போல் அது தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    11-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.

    10-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வருகிற 11-ந்தேதி மேற்கண்ட மாவட்டங்கள் (ராமநாதபுரம் நீங்கலாக) மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வருகிற 12-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    வருகிற 13-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக மீனவர்கள் வருகிற 11-ந்தேதி வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.
    • மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதிக்கு இடையே நிலை கொண்டிருந்தது. அது மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.

    இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 26-ந்தேதி காலை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகாலையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு குளிர் காற்றே அதிக அளவில் வருவதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் இன்று முதல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையை கடந்து தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக்கடலுக்கு செல்லும்.

    இதன் காரணமாக வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 28-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×