search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேசம் இந்தியா தொடர்"

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 339 ரன்கள் எடுத்தது.
    • அஸ்வின் 102 ரன்களிலும் ஜடேஜா 86 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    சதம் நொறுக்கிய இந்திய வீரர் அஸ்வினுக்கு சென்னை மைதானத்தில் இது 2-வது சதமாகும். ஏற்கனவே 2021-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இங்கு 106 ரன்கள் எடுத்திருந்தார். இதையும் சேர்த்து இங்கு தனது 5-வது டெஸ்டில் ஆடும் அஸ்வின் இன்னிங்சில் 4 முறை 5 விக்கெட் சாய்த்துள்ளார்.

    இதன் மூலம் ஒரு மைதானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சதத்துடன், பலமுறை இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்த 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கேர்பீல்டு சோபர்ஸ் (ஹெட்டிங்லே மைதானத்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), இந்தியாவின் கபில்தேவ் (சென்னை மைதானத்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ன்ஸ் (ஆக்லாந்தில் 2 சதம் மற்றும் 2 முறை 5 விக்கெட்), இங்கிலாந்தின் இயான் போத்தம் (ஹெட்டிங்லே மைதானத்தில் 2 சதம், 3 முறை 5 விக்கெட்) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    சென்னையைச் சேர்ந்த அஸ்வின் பின்னர் அளித்த பேட்டியில், 'சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். இங்கு முழுமையான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன். இது எனக்கு நிறைய அற்புதமான நினைவுகளை கொடுக்கிறது.

    இன்றைய டெஸ்டுக்குரிய ஆடுகளம், பழைய சேப்பாக்கம் ஆடுகளம் போன்று உள்ளது. கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். பந்து வீச்சாளர்கள் ஸ்டம்புக்கு வெளியில் வீசும் போது அடித்து ஆடலாம். ஒரு கட்டத்தில் வியர்த்து கொட்டி களைத்து போன போது அதை கவனித்த ஜடேஜா அந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். இனி 2 ரன்களை 3 ரன்களாக ஓடி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார். அவரது யோசனை மீண்டு வர உதவிகரமாக இருந்தது' என்றார்.

    மேலும் அவர், 'புதிய பந்து ஓரளவு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். நாளைய தினம் (இன்று) புத்துணர்ச்சியோடு போட்டியை தொடங்குவோம். ஆடுகளத்தில் இன்னும் ஈரப்பதம் உள்ளது. அது சீக்கிரம் காய்ந்து விடும் என்று நம்புகிறேன்' என்றார்.

    • மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மிர்பூர்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

    இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் போட்டியில் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல் ஒருவரே நிலைத்து நின்று ஆடினார். அதுவும் கடைசிகட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

    இதேபோல பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் முக்கியமான கட்டத்தில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இது அணியின் வெற்றியை பாதித்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு நம்பிக் கையை அதிகரித்துள்ளது.

    கேப்டன் லிட்டன் தாஸ், சகீப்-அல்-ஹசன், முஸ்பிகுர் ரகீம், ஹசன் மிராஸ், எபொதத் உசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    • குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர்.
    • ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.

    மிர்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தனர். இதனால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 80 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. நடுவர் ரஞ்சன் மடுகல்லே நடவடிக்கை எடுத்தார்.

    ×