என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெரயில் நிலையம்"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக சென்னை- செங்கோட்டை, மதுரை-செங்கோட்டை, செங்கோட்ட- மயிலாடுதுறை, வேளாங்கண்ண-எர்ணாகுளம், சென்னை- கொல்லம், திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையம் வழியாக தினசரி 6 ெரயில்கள் செல்கிறது. பொதுமக்கள் ஆட்டோ மூலம் ெரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். வெளியூர் பயணிகள் நீதிமன்றம் சென்று அங்கிருந்து ெரயில் நிலையத்திற்கு நடந்து செல்கின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, திருத்தங்கல், கிருஷ்ணப்பேரி, அச்சங்கு ளம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை தேரடி, நகராட்சி அலு வலகம், தாலுகா அலுவலகம், ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் ெரயில் பயணிகள் மட்டுமின்றி தாலுகா அலுவலகம் செல்லும் மக்களும் பயனடைவர். இதனால் நகர பஸ்களை ெரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது.
    • கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது. எனவே இந்த இறங்கு தளம் மூலம் சரக்கு ெரயிலில் இருந்து வரும் உரங்கள், யூரியா, அரிசி மூட்டை ஆகியவற்றை இறக்கி சேமிப்பு கிடங்களில் வைப்பது வழக்கம். அதேபோல் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது. டெல்டா மாவட்டங்களான நாகை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நெல் அறுவடை முன் கூட்டியே நடைபெற்று வருகிறது.

    இதனால் அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ரேசன் கடைகளுக்கு அரிசி வழங்குவதற்காக 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வாங்கி அதை சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் ஏற்றி வந்து லாரிகள் மூலம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதன் மூலம் அரிசி மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் வைத்து சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளனர்.

    ×