என் மலர்
நீங்கள் தேடியது "வங்காளதேசம் இந்தியா மோதல்"
- முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
- இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
மிர்புர்:
வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் அனாமுல் ஹக் 11 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய வீரர் சிராஜ் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
- இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
- வங்காளதேசத்தை சேர்ந்த 2 வீரர்கள் டக் அவுட்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான சௌமியா சர்கார் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்தடுத்த களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 50 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணி சார்பில் முகமது சமி மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வங்காளதேசம் சார்பில் துவக்க வீரரான தன்சித் ஹாசன் மட்டும் 25 ரன்களை எடுத்தார்.
- வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- ரோகித் சர்மா கேட்ச்-ஐ தவற விட்டார்.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த வகையில், போட்டியின் 8-வது ஓவரை அக்சர் படேல் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வங்காளதேசம் அணியின் தன்சித் ஹாசன் (25) தனது விக்கெட்டை பறிக் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து இதே ஓவரின் மூன்றாவது பந்தை முஷ்ஃபிகுர் ரஹிம் எதிர்கொள்ள அவரும் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் அக்சர் படேல் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுக்கும் சூழல் உருவானது. அதன்படி 8-வது ஓவரின் நான்காவது பந்தில் விக்கெட் எடுத்தால் அக்சர் படேல் ஹாட் ட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருக்கலாம்.
இந்த பந்தை எதிர்கொண்ட ஜேகர் அலி தடுப்பாட்டம் ஆட முயற்சித்தார். எனினும், இந்த பந்து அவரது பேட்-இல் பட்டதும் ஸ்லிப்-இல் நின்றிருந்த கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் ஆக மாறியது. பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்த கேப்டன் ரோகித் சர்மா எதிர்பாராத விதமாக அந்த கேட்ச்-ஐ தவறவிட்டார்.
கேட்ச்-ஐ தவறவிட்டது, அக்சர் படேலுக்கு ஹாட் ட்ரிக் விக்கெட் பறிபோனது என களத்தில் கோபமுற்ற ரோகித் சர்மா தனது கைகளால் மைதானத்தின் தரையை வேகமாக குத்தினார். மேலும் அக்சர் படேலிடம் கேட்ச்-ஐ தவற விட்டதற்கு மன்னிப்பு கோரினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
- இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
- வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பிறகு, களமிறங்கிய அந்த அணியின் தவ்ஹித் ரிடோய் மற்றும் ஜேகர் அலி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. ஜேகர் அலி எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆக இருந்த நிலையில், ரோகித் சர்மா கேட்ச்-ஐ தவற விட்டதால் 114 பந்துகளை ஆடி 68 ரன்களை சேர்த்தார்.

மறுப்பக்கம் ரிடோய் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். இவர் 100 ரன்களை கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக வங்காளதேசம் அணி 228 ரன்களை சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.