search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் முனைவோர் சான்றிதழ்"

    • கோவில்பட்டியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை நடத்தியது.
    • ஓவியர்களுக்கு சான்றிதழ்களை மாநிலத் தலைவர் அடைக்கலம் வழங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் மற்றும் நிப்பான் பெயிண்ட்ஸ் இணைந்து தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை நடத்தியது. விழாவில் "முன் கற்றலை அங்கீகரிக்கும் " தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு என்.சி.வி.இ.டி.யால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மத்திய அரசின் 10 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சியும், மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை, மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள தேவர் மகாஜன சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சம்சுகனி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் தங்கமாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர் மற்றும் ஓவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் அட்டையை மாநிலத் தலைவர் அடைக்கலம் உறுப்பினர்களுக்கு வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் கயத்தாறு ஒன்றியத் தலைவர் ஜெயபால், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×