என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "11 சேலைகள் திருடிய"
- மாதேஸ்வரி தான் கடையில் அடுக்கி வைத்திருந்த 11 சேலைகள் காணாமல் போனதை தெரிந்தது.
- சேலை திருடிய குற்றத்திற்காக சிவரஞ்சனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பவானி:
பவானி அருகே உள்ள குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி மாதேஸ்வரி. இவர்கள் பவானி காமாட்சி அம்மன் கோவில் ரோட்டில் ஜவுளிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த கடைக்கு நேற்று 3 பெண்கள் வருகை தந்து 9 வயது குழந்தைக்கு துணி வேண்டும் எனக்கூறினர். பின்னர் மாதேஸ்வரி துணியை காண்பித்தார். அந்த பெண்கள் பல வகையான துணியை கலைத்து பார்த்தனர்.
இந்நிலையில் 2 பெண்கள் வெளியில் இருந்து கொண்டு ஒருவர் உள்ளே துணியை பார்க்க சென்ற நிலையில் நாம் வந்த வேலை முடிந்தது கிளம்பலாம் எனக்கூறி 3 பேரும் மள மளவென கடையை விட்டு கிளம்பினர்.
அப்போது மாதேஸ்வரி தான் கடையில் அடுக்கி வைத்திருந்த 11 சேலைகள் காணாமல் போனதை தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.16,500 ஆகும். இதனையடுத்து அந்த 3 பெண்களில் ஒருவரை பிடித்து பவானி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் கோபி செட்டிபாளையம், கணக்கம் பாளையம், பழைய காலனி பாரதி வீதி பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை மனைவி சிவரஞ்சனி (34) என்பதும், சேலைகளை திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து சேலை திருடிய குற்றத்திற்காக சிவரஞ்சனி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓட்டம் பிடித்த கார்த்தி மனைவி அபிராமி, வேலுச்சாமி மனைவி தாமரை ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஜவுளிக்கடையில் துணி எடுப்பதாக கூறி உள்ளே புகுந்த 3 பெண்கள் 11 சேலைகளை திருடிய சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்