search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் மறியல்"

    • தலைவன்வடலி சேது ராஜா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் ஒப்பந்த தனியார் தொழிற்சாலையில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்
    • நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி சேது ராஜா தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (வயது21). தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். தண்ணீர் பந்தல் அருகே வரும்போது எதிரே திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் பஸ்ஸின் அடியில் சிக்கிக் கொண்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்த பொது மக்களும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தலைவன்வடலி விலக்கு அருகே இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். அப்போது உயிரிழந்த கார்த்திக் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    இதனால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தி னர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    ×