என் மலர்
நீங்கள் தேடியது "சொத்தவரி உயர்வு"
- திருமங்கலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருமங்கலம்
தமிழக முழுவதும் தி.மு.க. அரசின் மின், பால் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயரத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு இன்று நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நகரச்செயலாளர் ஜே.டி.விஜயன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சதீஷ் சண்முகம், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர், மாவட்ட எம்.ஜி.ஆர். அணி இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் பேரவை பாண்டி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம், ஒன்றிய பொருளாளர் சுவாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், நகர் முன்னாள் யூனியன் துணை சேர்மன் முருகன், மன்ற உறுப்பினர்கள் போது ராஜன், அமலிகிரேஸ், கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் வாசிமலை, துரைப்பாண்டி, முத்துராஜ், வெங்கடேஸ்வரன், விசாகன், பாலகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.