search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. கூட்டணி கட்சி"

    • ஏழை, பாமரர்களுக்கு சலுகை வழங்குவது திராவிட மாடல்.
    • பணக்காரர்களுக்கு சலுகைகள் செய்வது ஆரிய மாடல்.

    நாகர்கோவில்:

    நாகர் கோவில் மாநகர வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நாகர் கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே நடந் தது. பொதுக்கூட்டத்திற்கு வடக்கு பகுதி செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஆனந்த் வரவேற்றார். மாந கர துணைச் செயலாளர் வேல்முருகன், கவுன்சிலர் கலா ராணி, பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஜீவா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக டாக் டர் செந்தில்குமார் எம்.பி. கலந்து கொண்டு பேசிய தாவது:-

    தி.மு.க. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து பேராசி ரியர், கருணாநிதி ஆகியோர் இணைந்து பாடுபட்டதன் காரணமாக 20 ஆண்டுகளில் தி.மு.க. அசைக்க முடியாத கட்சியாக உருவானது. பேராசிரியருக்கு பொதுக் கூட்டங்கள் நடத்தி வரு கின்றோம். மற்ற கட்சிகள் அவர்களது தலைவர்களை மறந்து விடுகின்றனர்.

    ஜெயலலிதா இறந்த பிறகு அவருக்கு எந்த பொதுக்கூட்டமும் அ.தி.மு.க.வினர் நடத்தவில்லை.உலகம் நமது பண் பாட்டை பேச வேண்டும் என்று கன்னியாகுமரியில் கருணாநிதி திருவள்ளுவ ருக்கு 133 அடி திருவள்ளு வர் சிலையை அமைத்தார்.தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்திற்கு பல திட்டங் களை நிறைவேற்றி உள் ளார். அதில் மக்களை தேடி மருத்துவம், பெண்க ளுக்கு இலவச பஸ் பயணம் திட்டம், என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    உலக நாடுகள் வியக்கும் அளவில் தமிழகத்தில் கல்வி யையும், மருத்துவத்தையும் கொண்டு செல்லும் அள விற்கு தமிழக முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக பேச மாட்டார். ஆனால் செயலாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறார். ஆரிய மாடல், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தி யாசம் பணக்காரர்களுக்கு சலுகைகள் செய்வது ஆரிய மாடல். ஏழை, பாமரர் களுக்கு சலுகை வழங்குவது திராவிட மாடல்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாள ருமான மகேஷ் பேசுகையில், இந்துக்கள் என்றால் பாரதியஜனதா என்று மக் களை திசை திருப்பி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சியில்தான் குமரியில் உள்ள கோவி லுக்கு கும்பாபிஷேம் நடத்த 48கோடி ரூபாய் ஒதுக்கியது. இதுபோல் பழுதடைந்த 100 கோவில்களை புணரமைப்பு செய்ய ரூ.5 கோடியே 83 லட் சத்தை தமிழக அரசு ஒதுக்கி யுள்ளது. அனைத்து மதத்தை யும் ஒன்று போல் நினைத்து வளர்ச்சி என்ற நோக்கில் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். வருகிற நாடாளுமன் றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

    பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் விஜயரத்தினம், மாநில மகளி ரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொரு ளாளர் கேட்சன், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், மாநில மீனவரணி துணை செயலாளர் நசரேத் பசலியான், மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளர் தில்லை செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், லிவிங்ஸ்டன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என். சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×