என் மலர்
நீங்கள் தேடியது "சோளம்-பாசிப்பயிறு"
- சோளம்-பாசிப்பயிறு ஏலம் நடந்தது.
- மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமங்கலம்
திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குளத்துவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயா என்ற பெண் விவசாயியின் 266கிலோ இருங்குசோளம் மறைமுக ஏலத்திற்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.37.25-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.9,909க்கு வர்த்தகம் நடந்தது.
லாலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 2.501 கிலோ பாசிப்பயிறு அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.72.50 க்கும் குறைந்தபட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.71-க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 889-க்கு வர்த்தகம் நடந்தது. இங்கு வேளாண் விளைபொருள் வரத்து அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சராலும், வேளாண் உற்பத்தி ஆணையராலும், வேளாண் விற்பனைத் துறை இயக்குநராலும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமானது மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு கண்காணிப்பாளர் வெங்கடேசை 90251 52075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.