search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைவெள்ளம்"

    • இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

    இதில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை அறிவித்து வழங்கியது.

    இந்நிலையில் அதே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இரண்டு மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.6 ஆயிரம், குறைந்த பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது.

    அந்த சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

    தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.

    இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்து வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது.

    அமித் ஷாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறும் குழு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் குழுவை சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), பி.ஆர்.நடராஜன் (இந்திய மார்க்சிஸ்ட்), ரவிக்குமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் அமித்ஷாவை சந்திக்க செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை வலியுறுத்துவதற்காக உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை அவரது வீட்டில் சந்திக்க உள்ளோம் என்றார்.

    • மழைவெள்ளம் ஆற்றுபடுகையில் செல்லும் வகையில் ஷட்டர்கள் திறப்பு
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அருகே செய்யாறு அணைக்கட்டு ஆற்று கால்வாய் பாச னம் பெறும் 147 ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் ஆற்றுப்படுகையில் வெளி யேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணிதுறையினர் தெரிவித்தனர்.

    பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செல்லும் செய்யாற்றுப்படுகை யில் நூற்றாண்டு கண்ட அணைக்கட்டு அமைக் கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பக்க கால்வாய் அமைக்கப் பட்டு மழைக்காலங்க ளில் ஆற்றுப்படுகையில் வரும் வெள்ள நீர் இந்த கால்வாய் வழியே திரும்பி அனுப்பப்பட்டு சுமார் 147 ஏரிகள் நிரம்பும் வகை யில் அமைக்கப்பட்டுள் ளது.

    இந்நிலையில், கடந்த வாரம் மாண்டஸ் புயல் தாக்கத்தால் திருவண்ணா மலை மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இத னால் ஆற்றுப்படுகையில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனை தொடர்ந்து அணைக்கட்டு பகுதியில் : ஆற்று கால்வாய் வழியே தண்ணீர் திருப்பி விடப் பட்டது. இதன் மூலம் ஆற்று கால்வாய் பாச னம் பெறும் சுமார் 147ஏரிகளும் நிரம்பி வழிந்தது.

    இதுகுறித்து பொதுப்பணிதுறையினர் கூறுகை யில், 'ஆற்றுக்கால்வாய் வழியே பயன் பெறும் ஏரி கள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகிறது.இதனால் கடந்த 2 நாட்களுக்கு மேலாக அணைக்கட்டில் உள்ள பக்க கால்வாய் ஷட்டர் கள் அனைத்தும் மூடப் பட்டு மழைவெள்ள நீர் ஆற்றுப் படுகையில் செல் லும் வகையில் ஷெட் டர்கள் திறக்கப்பட்டுள் ளது.

    மேலும் ஆற்றுக்கால் வாய் வழியே செல்லும் பாசன நீர் அனைத்து ஏரி களும் நிரம்பி இறுதியில் மதுராந்தகம் ஏரி நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    ×