search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 ஆம்புலன்சு டிரைவர்"

    • ரோட்டில் தங்க செயின் கீழே கிடந்தது.
    • அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ராமச்சந்திரன் போலீசிடம் அந்த நகையை கொடுத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் அருகே டீக் கடைகள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள், பஸ் நிலையம், பத்ரகாளி அம்மன் கோவில், உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியாக இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி (45) வங்கியில் வைத்திருந்த நகையை மீட்டு கீழ்பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தன் பாக்கெட்டில் வைத்திருந்த 1 பவுன் தங்க செயினை தவற விட்டு விட்டார். நகை இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசாரிடம் கூறினார்.

    இந்த நிலையில் பர்கூர் 108 ஆம்புலன்சு டிரைவரான அந்தியூர் அருகே உள்ள பிரம்ம தேசத்தைச் சேர்ந்த மகேந்திரன் (30) டீக்குடிக்க தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் ரோட்டில் தங்க செயின் கீழே கிடந்தது. இதை தொடர்ந்து அவர் அந்த நகையை எடுத்து பார்த்தார். இது தங்கச்செயின் என்பதை உறுதி செய்தார்.

    உடனடியாக அவர் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ராமச்சந்திரன் என்ற போலீசிடம் அந்த நகையை கொடுத்தார்.

    இதையடு த்து போலீசார் ஒலகடத்தை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தியிடம் செல்போனில் பேசி உடனடியாக வரவழை த்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் தங்க செயினை ஒப்படை த்தனர்.

    மேலும் நகையை பெற்று கொண்ட ஈஸ்வரமூர்த்தி 108 டிரைவர் மகேந்திரன், போலீசார் மற்றும் அலுவலர்க ளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

    தவறவிட்ட நகை ஒரே நாளில் கிடைத்ததை யடுத்து அவர் மகிழ்ச்சியுடன் சென்றார்.

    மேலும் ரோட்டில் கிடந்த நகையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மகேந்திரனுக்கு பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நண்பர்கள் தன்னார்வலர்கள் வாழ்த்து கூறி பாராட்டு தெரிவித்தனர்.

    • சென்னியப்பன் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (39). இவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சு டிரைவராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சென்னியப்பன் பள்ளிபாளையம் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கியதாகவும், இதனால் அவருக்கு கடன் ஏற்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதையொட்டி அவர் கடந்த சில நாட்களாக கடனை கட்ட முடியாமல் மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைய டுத்து சென்னியப்பன் அந்த வீட்டை விற்பனை செய்து கடனை அடைக்கலாம் என்று தனது மனைவியிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து (விஷம்) மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சென்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    ×