என் மலர்
நீங்கள் தேடியது "பொய்கை சந்தை"
- 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன
- வியாபாரிகள் மகிழ்ச்சி
வேலூர்:
பொய்கைச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன்மூலம், சுமார் ரூ.1 கோடிக்கு கால் நடை விற்பனை நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
பொய்கையில் வாரந்தோறும் செவ் வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்க ளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடு கள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தைக்கு கறவை மாடுகள்,காளைகள், உழவு மாடுகள், எரு மைகள் என 2,000-க்கும் அதிகமான மாடு கள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில், சுமார் ரூ.1 கோடிக்கு கால்நடை வர்த்தகம் நடைபெற் றது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:-
கடந்த சில வாரங்களாகபொய்கைச் சந்தையில் கால்நடை வர்த்தகம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரி த்திருந்தது. விற்பனையும் அதிகளவில் நடைபெற்றது.
குறிப்பாக, கறவை மாடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது என்றனர்.