என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி நூல் விலை"

    • பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
    • நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபாவளி பண்டிகை ஆர்டர் பரபரப்பாக மாறியிருந்தது. வழக்கம் போல் தீபாவளிக்கு பின் பனியன் ஆர்டர்கள் மந்தமாகியது.

    அதன்பின் தைப்பொங்கல் பண்டிகையில் இருந்து மாதாந்திர விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கின. நவம்பர் -டிசம்பர் மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாத இறுதியில் இருந்து தான், பின்னலாடை நிறுவனங்களின் இயக்கம் சீராகியுள்ளது.

    திருப்பூரில் தயாரிக்கப்படும் பருத்தி நூலிழை டி-சர்ட்டுகள், கோடைகாலத்துக்கு ஏற்றவை. அத்துடன், பெண்களுக்கான இரவு நேர ஆடைகளும் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. அதன்படி நாடு முழுவதும் கோடைகால ஆடைகள் விற்பனை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் விசாரணை சாதகமாக மாறியுள்ளது. வடமாநிலங்களில் போட்டியாக உற்பத்தி நிலையங்கள் துவங்கினாலும் கோடை கால பயன்பாட்டுக்கான பருத்தி பின்னலாடைகள் திருப்பூரில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் இருந்து ஆர்டர் வர தொடங்கி உள்ளது.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தீபாவளிக்கு பின் பொங்கல் பண்டிகை வரை திருப்பூர் ஆடை விற்பனை மிக மந்தமாக இருந்தது. அதன்பின் அன்றாட விற்பனைக்கான ஆர்டர்கள் வர தொடங்கியது. கோடை தொடங்கி விட்டதால் வடமாநிலங்களில் இருந்து தற்போது தான் ஆர்டர் வந்துள்ளது. ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளை, அனுப்பி வைக்கும் பணி வேகமெடுத்துள்ளது.

    கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பின்னல் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். அதற்காக பின்னல் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் விற்பனை வேகமெடுத்து வருகிறது. ஜூன் மாதம் பள்ளி சீருடை ஆர்டர் துவங்கும் வரை கோடைகால ஆர்டர்கள் கை கொடுக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ரம்ஜான் பண்டிகைக்காக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வழக்கமான வர்த்தகர்கள் வந்து கொள்முதல் செய்து சென்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொண்டாடப்படும் யுகாதி பண்டிகைக்காக, அம்மாநில வியாபாரிகளும் மொத்த கொள்முதல் செய்து சென்றனர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் திருப்பூரில் தயாரிக்கப்படும் 'பைன்' 'டி-சர்ட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது என ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இந்த தொழில் கடந்த 8 ஆண்டாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
    • இதற்கிடையே 2021-ம் ஆண்டு நவம்பர் முதல் பருத்தி நூல் விலை 100% உயர்ந்து உள்ளது.

    நாமக்கல்:

    சேலம், நாமக்கல், கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், விருதுநகர் உள்பட தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது.

    இந்த தொழில் கடந்த 8 ஆண்டாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. பருத்தி நூலை பயன்படுத்தி விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலை, துண்டு, பெட்ஷீட், சாமி வேட்டி உள்ளிட்ட ஜவுளிகள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதனால் அரசுக்கு அந்நிய செலவாணியும், மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து வந்தன.

    இதற்கிடையே 2021-ம் ஆண்டு நவம்பர் முதல் பருத்தி நூல் விலை 100% உயர்ந்து உள்ளது. நூல் விலை உயரும் போதும், குறையும் போதும் பாதிக்கப்படுவது நெசவாளர்கள் தான். அவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு விசைத்தறி ஜவுளிக்கு விதிக்கப்பட்டு உள்ள ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தி நூல் விலையை அடிக்கடி ஏற்றம், இறக்கம் செய்யாமல், 6 மாதம் வரை ஒரே சீராக இருக்கும் வகையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

    விசைத்தறி சார்ந்த துறைகளுக்கு மின் கட்டணம் உயர்வை மாநில அரசு திரும்ப பெற வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு தனி அமைச்சர் நியமனம் செய்ய வேண்டும்.

    தொழிலை நம்பி உள்ள ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

    ×