search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒமைக்ரான் பிஎப்7"

    • டிசம்பர் 31-ந்தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • பாடகியின் பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    பீஜிங்:

    சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பி.எப்.7 ஒமைக்ரான் என்ற வகை வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீனாவின் பிரபல பாடகி ஒருவர் தனக்குத் தானே கொரோனாவை வரவழைத்து உள்ள சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவின் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான ஜேன் ஜாங் (38) ஆங்கில வருடப் பிறப்பையொட்டி டிசம்பர் 31-ந்தேதி இரவு இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று கருதி உள்ளார். இதனால் கொரோனா பாதித்த தனது நண்பர்களை வேண்டுமென்றே அவர்கள் சிகிச்சைபெறும் மையங்களுக்கு சென்று சந்தித்து உள்ளார்.

    இதனால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

    சீன சமூக வலை தளங்களில் 4.3 கோடி பின்தொடர்பவர்களை கொண்டிருக்கும் ஜேன்னின் இந்த பொறுப்பில்லாத செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக உள்ள நிலையில் பிரபலமான பாடகியே இப்படி செய்ததற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சீனாவில் நேற்று முன் தினம் 3101 பேர் புதிய ஒமைக்ரான் வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த 90 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் பாடகி ஜேன் ஜாங் தனது பதிவுகளை அழித்துவிட்டு, தான் செய்ததற்கு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

    • பிற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் சுட்டிக்காட்டினார்.
    • கூட்டு முயற்சியால், கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை இந்தியா சமாளித்தது என்றும் குறிப்பிட்டார்.

    புதுடெல்லி:

    சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன.

    இந்தியாவிலும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரும்படி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மாநிலங்களவை இன்று கூடியதும், பிற நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், உறுப்பினர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டியது நமது கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

    நிர்வாகம், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் கூட்டு முயற்சியால், கடந்த காலங்களில் கொரோனாவின் தாக்கத்தை இந்தியா சமாளித்தது என்றும் அவைத்தலைவர் குறிப்பிட்டார்.

    இதேபோல் மக்களவையிலும் உறுப்பினர்கள் மாஸ்க் அணியவேண்டும் என அவைத்தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். பாராளுமன்ற இரு அவைகளிலும் இன்று பெரும்பாலான உறுப்பினர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். 

    ×