என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நூதன வசூல்"
- கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
- வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, மாநகராட்சி கடை வாடகைகள் உள்ளிட்ட பல்வேறு வரிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், அதிகாரிகள் தீவிர வரி வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரிகள் மற்றும் மாநகராட்சி கடை வாடகையை உடனடியாக கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் மிக முக்கிய சாலையாக இருந்தவரும் லாரன்ஸ் சாலையில் வள்ளியம்மை பஜார் உள்ளது.
இங்குள்ள ஒரு சில கடைகளுக்கு சொத்து வரி பாக்கி இருப்பதாக மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு, வரி கட்ட வேண்டும் என வலியுறுத்தப் பட்டு வந்தனர். இன்று காலை கடலூர் மாநகராட்சி சார்பில் வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன. இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்ட யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் தரப்பில் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது 78 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வசூலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நூதன முறையில் வியாபாரிகள் வரி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்