என் மலர்
நீங்கள் தேடியது "மீனவ கிராமங்கள்"
- வங்க கடலில் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள்.
கடலூர்:
வங்க கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் வங்க கடலில் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. சுமார் 30 முதல் 40 அடி வரை கடல் அலை எழும்பி கரைக்கு முன்னோக்கி வருகிறது. கடல் சீற்றம் அதிகரிப்பு காரண மாக கடலூர் மாவட்ட மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். தாழங்குடா பகுதியில் படகுகளை நிறுத்துவதற்கு என்று தனியாக இடம் இல்லை. இவர்கள் கடற்கரை யோரம் படகுகளை நிறுத்தி வருகிறார்கள். கடல் சீற்றம் காரணமாக தங்களது படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் கடல் அருகே யாரும் செல்லக்கூடாது என்றும் மீன்வளத்துறை சார்பில் அறுவுறுத்தப்பட்டுள்ளது.
- 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
- 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன.
புதுச்சேரி:
காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கார்னிவெல்லின் ஒரு பகுதியாக மீனவ கிராமங்களுக்கிடையே படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, காளி குப்பம், மண்டபத்தூர், கீழக்காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன. இப்போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் தொடங்கி வைத்தார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போட்டியில் முதல் இடத்தை காளிகுப்பம் மீனவர்களும், 2-ம் இடத்தை மண்டபத்தூர் மீனவர்களும், 3-ம் இடத்தை கீழக்காசாக்குடி மேடு மீனவர்களும் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற மீனவர்களுக்கு 18-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும் என கலெக்டர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.
- படகுகளை மீட்க முடியாமல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
- கடல் பகுதியை ஆழப்படுத்தினால் கடலில் நீரோட்டம் காரணமாக கடல் நீர் உள்வாங்காமல் இருக்கும் என மீனவர்கள் கூறினர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ராமேசுவரம், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட வடக்கு கடல் பகுதிகளும் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சம் தெரிவித்து வந்தனர். அதேபோல் தாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமலும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள தோப்புக்காடு, சின்னப்பாலம், முந்தல்முனை, தரவை தோப்பு உள்ளிட்ட 4 மீனவ கிராமங்களில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 500 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தரைதட்டி நிற்கிறது.
அந்த படகுகளை மீட்க முடியாமல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எனவே சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கடல் உள்வாங்கி இருப்பதால் அப்பகுதியில் கடற்கரை ஓரம் வசிக்கக்கூடிய நண்டு, சங்கு, சிற்பி, நட்சத்திர மீன் உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்து வருகிறது. அதனை நாய்கள், காகங்கள் இரையாக சாப்பிட்டன.
பாம்பன் தெற்கு கடற்கரை பகுதிகளில் அடிக்கடி கடல் உள்வாங்கி வருவதால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே குந்துகால்-குருசடை தீவு இடையே உள்ள கடல் பகுதியை ஆழப்படுத்தினால் கடலில் நீரோட்டம் காரணமாக கடல் நீர் உள்வாங்காமல் இருக்கும் என மீனவர்கள் கூறினர்.
கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட வடக்கு கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் வழக்கத்திற்கு மாறாக 500 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளதால் மீனவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.