என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச கல்வி"

    • இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளருக்கு சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்படுகிறது.
    • ஹயாட்டில் நடை பெறும் சர்வதேச கல்வி விருதுகள் வழங்கும் மாநாட்டில் இதற்கான விருது வழங்கப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயிலும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹீம்.

    இவருக்கு நடப்பாண்டிற்கான சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருதை வழங்குவதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிட்ஸ் கிராப்ட் எல்.எல்.சி. கல்விக் குழு அறிவித்துள்ளது.

    விருதுக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை யில், கல்வித்துறையில் புதிய மைல்கற்களை அடைய எங்களுக்கு உதவிய உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றலுக்காக இந்த விருதைப் பெறுபவராக நீங்கள் தே ர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    டிச.30-ந்தேதி குர்கானில் உள்ள ஹயாட்டில் நடை பெறும் சர்வதேச கல்வி விருதுகள் வழங்கும் மாநாட்டில் இதற்கான விருது வழங்கப்படுகிறது.

    ×