search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையில் பள்ளம்"

    • தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்நகர் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டது.
    • இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் இருந்து முஸ்லிம்நகர் வழியாக ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையில் வந்தடையும் பாயிண்ட் பகுதி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் மதனஞ்சேரி, தொண்டுகுழி, கண்டிகை ஆகிய கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊத்துக்கோட்டையில் இருந்து ஜீரோ பாயிண்ட்டுக்கு இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு உங்களில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இதில் தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்நகர் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டது. மேலும் தாமரைகுப்பம் - ஜீரோ பாயிண்ட் இடையே சாலையும் குண்டும் குழியு மாக மாறியது.

    இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் ஒத்தையடி சாலையாக மாறிவிட்டது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்ட இடம் ஆபத்தான நிலையில் மெகா பள்ளமாக காட்சி அளிக்கிறது. இது இன்னும் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லவே அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் பள்ளத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே தாமரைக்குப்பம் - ஜீரோ பாயிண்ட் இடையே குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைத்து மெகா பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமரைகுப்பம் மற்றும் முஸ்லிம் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
    • சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சாலையின் இரு புறங்களிலும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • தொட்டியிலிருந்து பங்காரம் வழியாக உலகம் காத்தான் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • எச்சரிக்கை பலகை கூட அமைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியிலிருந்து பங்காரம் வழியாக உலகம் காத்தான் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் ஓடை குறுக்கே செல்வதால் தண்ணீர் செல்வதற்கு வழி அமைத்து பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து செல்வதற்கு அமைக்கப்பட்டது. இந்தப் பள்ளம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்யாமல் உள்ளனர்.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர். எச்சரிக்கை பலகை கூட அமைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. பங்காரம் காட்டுக்கொட்டாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காட்டுக்கொட்டாய் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் சைக்கிளில் அவ்வளியே பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்படி செல்லும் பொழுது பள்ளத்தில் விழுந்தது விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செல்லும் வாகனங்கள் பள்ளத்திலே விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு கூட 108 ஆம்புலன்ஸ் அவழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தினால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

    ×