search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 நாட்களுக்கு"

    • ஈரோடு பகுதியில் 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது.
    • பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் என 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி வருகின்ற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 18-ந் தேதி வழக்கம் போல மார்க்கெட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 16 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது.

    இந்த மையங்களில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் அரையாண்டு தேர்வு நிறைவு என்பதால் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக நேற்று ஒரு நாள் மட்டும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 16 மையங்களில் நடக்கிறது.

    காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன .

    இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×