என் மலர்
நீங்கள் தேடியது "உடலில் ஏற்பட்ட அலர்ஜியால்"
- மனம் உடைந்த முத்துசாமி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
- இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள முள்ளம்பட்டி திருவாச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (62), இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கண் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முத்துசாமி உடலில் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக உடல்வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த முத்துசாமி வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது மனைவி அருக்காணி என்பவர் முத்துசாமியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.