search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிப்பு"

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
    • கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

    ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.

    இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பட ரிலீஸுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    இதனை இன்னும் தூண்டிவிடும் வகையில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது பட ரிலீஸுக்கு என்ற கவுண்டவுனை ஆரம்பித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வ்லைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    படத்தின் டிரைலர் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது.
    • இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.

    இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி  கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னதாக படத்தில் பணியாற்றியவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா படம் பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

     

    அந்த பதிவில் அவர் கூறியதாவது, 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
    • கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நேற்று முதலே கன்னியாகுமரியில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.

    இந்த சீசனை யொட்டி கன்னியா குமரியில் வெளி மாநில வியாபாரிகளும் ஏராளமான சீசன் கடை களை வைத்து உள்ள னர். இதற்கிடையில் நரிக்குற வர்களும் கன்னியாகுமரியில் சாலையோரம் தங்கி இருந்து ஊசி மற்றும் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு நேரங்களில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சாலை ஓரமாக படுத்து தூங்குவது வழக்கம். அவ்வாறு நேற்று இரவு நரிக்குறவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபம் அருகே சாலையோரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூங்குவது போல் நடித்து அவர்கள் வைத்திருந்த பாசி மாலைகள் மற்றும் பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது.

    இதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்த நரிக்குற வர்கள் கூச்ச லிட்டனர். பின்னர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்ப தால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×