என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லீரல் பாதிப்பு"

    • ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர் வேண்டுகோள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சையது அபுல் ஹாசன் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள கடந்த 2017-18 ஆம் ஆண்டு மருத்து மாணவராக சேர்ந்து அதன் பின் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பின்னர் அவர் ஆன்லைன் கல்வி மூலமாகவே மருத்துவ கல்வியை முடித்து கடந்த 11-ந்தேதி மீண்டும் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றார்.

    அப்போது ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சீனாவில் உயிரிழந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கடந்த மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • துரித உணவுகள் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது.
    • துரித உணவுகளில் அதிகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும்.

    தற்போதைய வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளே பெரும் இடத்தை பிடித்துள்ளன. அலுவலக பணி செய்பவர்கள் அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்றால், அங்கு அதிகரிப்படியாக நிறைந்திருப்பவை துரித உணவுகளாகவே இருக்கிறது. இன்று மட்டும்தான் என்று நாம் தினமும் எடுக்கும் சிறிய சிறிய துரித உணவுகள் கூட உங்கள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    வீட்டில் சமைப்பதை விட கொஞ்சம் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லாருக்குமே இருக்கும். அதனால்தான் ஹோட்டலுக்கு சென்று பர்கரோ அல்லது பீட்சாவோ சாப்பிடுகிறோம்.

    ஆனால், இதுபோன்ற துரித உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நம் உடல்நலத்தை மோசமாக பாதிக்கும். அதிக கலோரிகளை கொண்ட உணவையோ அல்லது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு குறைகிறது. நாளடைவில் இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome disease) வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், டயாபடீஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக ட்ரைகிளீசரைட், நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பது மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் வயிறு உப்புசம், சோர்வு, குடல் அழற்சி போன்றவை ஏற்படும்.

     துரித உணவுகள் சாப்பிடுவதால் பல வழிகளில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் பல மெடபாலிக் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது கல்லீரல். துரித உணவுகளில் அதிகமாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும். இது கல்லீரலை பெரிதாக்கி குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.

    இந்நோய் மோசமானால் சிரோசிஸ் தாக்கும் அபாயம் உள்ளது. துரித உணவுகளில் அதிகமாக இருக்கும் சுத்திகரிகப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைடரேட்ஸ் கல்லீரலில் அழற்சியை உண்டாக்குகிறது. மேலும் துரித உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தை தடை செய்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது.
    • நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

    மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் மட்டுமே நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட எந்திரங்களின் உறைநிலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

    ஆடை தயாரிப்பு, பெயிண்ட் உற்பத்தி, பிளாஸ்டிக் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் முக்கிய மூலப் பொருளாக மெத்தனால் பயன்படுகிறது. மை, பிசின்கள், பசைகள் மற்றும் சாயங்களை உருவாக்க உதவும் ஒரு தொழில்துறை கரைப்பானாக மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெட்ரோலில் கூட துணை பொருளாக மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.

    மெத்தனால் பயன்பாட்டிற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்கள் மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும். மேலும் மெத்தனாலை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க தனி அமைப்புகள் உள்ளன. தொழிற் காரணங்களை தவிர்த்து பிற வகையான பயன்பாட்டிற்கு மெத்தனாலை பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

    உயிரைப் பறிப்பது எப்படி?

    கள்ளச்சாராயத்திற்கும், விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது.

    மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். தொழிற்துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மெத்தனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய விஷமாகும்.

    குறிப்பிட்ட அளவுக்கு மேல் இவற்றை உட்கொள்ளும் மனிதர்களின் நியூரான்களில் கலக்கும் போது உயிரிழப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. மேலும், இவை மூளையின் செல்களை அழிப்பதால் மெத்தனாலை உட்கொள்ளும் போது நிரந்தரமாக கண்பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் குறிப்பிட்ட தர நிா்ணயத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அதில் மெத்தனால் இருக்காது.

    ஆனால், சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் தயாரிக்கும்போது நொதி நிலையில் மெத்தனால் உருவாகக்கூடும். பொதுவாக ஒருவா் அருந்தும் சாராயத்தின் அளவில் 10 மில்லி லிட்டர் மெத்தனால் இருந்தாலே பாா்வை பறிபோய்விடும். அதுவே 40 மில்லி லிட்டருக்கு மேல் இருந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும். மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தினால் 12-ல் இருந்து 24 மணி நேரத்துக்குப் பிறகே அதன் விளைவுகள் வீரியமடையும்.

    வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், காது கேளாமை, பாா்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். மனித உடலில் மெத்தனால் கலந்தவுடன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது 'பாா்மால்டிஹைட்' என்ற நச்சு பொருளாக மாற்றமடையும். அதன் பின்னா் அது 'பாமிக்' அமிலாக மாறும்.

    இந்த வகையான அமிலம்தான் 'பாா்மாலின்' எனப்படும் திரவமாக மாற்றப்பட்டு இறந்தவா்களின் உடலை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறாக மெத்தனால் 'பாமிக்' அமிலாக மாறிவிட்டால் உடனடியாக நரம்பு மண்டலத்தைப் பாதித்து பாா்வை இழப்பு ஏற்படும்.

    அதன் தொடா்ச்சியாக, கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கும். பின்னா் மற்ற உறுப்புகளின் இயக்கமும் முடங்கக்கூடும்.

    இத்தகைய நிலையை எட்டுவதற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் உயிரைக் காப்பாற்றி விடலாம். ஆனாலும், எதிா்விளைவுகளாக பாா்வை இழப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள், நடுக்குவாதம் ஆகியவை வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருக்கும்.

    எனவே மெத்தனால் கலந்த சாராயம் குடித்தவர்கள் வாழ்நாள் முழுக்க நோயுடன் போராடும் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    • திடீரென எடை அதி கரிப்பது, பெருத்த வயிறு இருப்பது.
    • தொடர்ந்து சோர்வாக இருப்பது, பலவீனமாக இருப்பது.

    இப்போது எங்கும் பரவி வரும் பாதிப்பு சுவாசக் குழாய் தொற்று. 'ப்ளூ' பாதிப்பு போன்றவைதான். பாதிப்பு அடைந்தவர்கள் அருகில் நீங்கள் இருந்தால் போதும். தும்மல், சளி, ஜூரம் என உங்களுக்கும் வந்து விடும்.

    சிலருக்கு எளிதில் சரி ஆகி விடும். சிலரை மருத்துவமனையில் படுக்க வைத்து விடும்.


    ப்ளூ பாதிப்பிற்கு உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்து, நிறைய திரவ உணவு, நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டால் நல்ல பலனை அடையலாம்.

    * ஜுரம் * உடல் சில்லிப்பு * மூக்கில் நீர் வடிதல் * மூக்கடைப்பு * அதிக சோர்வு * மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பின் தலைவலி, தொண்டை பாதிப்பு, வறட்டு இருமல் இருக்கும்.

    * கண் சிவந்து நீர் வடிதலும் இருக்கலாம். சாதாரண ஜலதோஷத் திற்கும் ப்ளூ பாதிப்பிற்கும் சிறிய வித்தி யாசம் இருக்கும்.

    * ப்ளூ ஜுரம் 3 அல்லது 4 நாட்கள் வரை கூட நீடிக்கும்.

    * ப்ளூ பாதிப்பில் உடல் வலி மிகக் கடுமையாக இருக்கும்.

    * உடல் சில்லிப்பு, குளிர் போன்றவை ப்ளூ ஜுரத்தில் அதிகமாக இருக்கும்.

    * தும்மல் ஜலதோஷத்தில் அதிகமாக இருக்கும்.

    * இருமல், நெஞ்சில் அசவுகரியம் போன்றவை ப்ளூ பாதிப்பில் அதிகமாக இருக்கும்.

    * தலைவலி ப்ளூ பாதிப்பில் 'மண்டையில் இடி' என்பது போல் இருக்கும்.

    * ப்ளூ பாதிப்பில் பாதிப்படைந்தது வெளியில் தெரிவதற்கு முன்பாகவே உங்களை சுற்றி உள்ளவர்கள் பாதிப்பு அடைகின்றனர்.

    * திடீரென உடலில் அதிக அசதி ஏற்படும்.

    * மூன்றாவது நாள் மேற்கூறிய பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

    * பசி இல்லாத உணர்வு இருக்கும்.

    * பாதிப்பின் போது அதிக ஓய்வு எடுப்பது அவசியம்.


    * அதிக திரவ உணவு, தண்ணீர், கிரீன் டீ, கஞ்சி, சூப், எலோக்ட்ர லைட்ஸ், வெது வெதுப பான நீர் இவற்றினை குடிக்கலாம்.

    * சோடா, ஜூஸ், காபி இவற்றினை தவிர்த்து விட வேண்டும்.

    * உடலுக்கு வெது வெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம்.

    * தனித்து இருப்பது நல்லது.

    * மருத்துவர் ஆலோ சனையின் பெயரில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    * 5 அல்லது 7 நாட்கள் வரை இந்த பாதிப்பு இருக்கலாம்.

    * ஐந்து வயதுக்கு கீழ் இருப்பவர்களும், 65 வயதிற்கு மேல் இருப்பவர்களும் கூடுதல் கவனம் பெற வேண்டும்.

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும்.

    * கர்ப்ப காலத்தில் பாதுகாப்பு அவசியம்.

    * சர்க்கரை நோய் * ஆஸ்துமா * இருதய நோய் * கல்லீரல் பாதிப்பு * சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் பாதிப்பினை அதிகம் அடைவர்.

    இந்த நோய்களின் உறவுக்காரர்கள் போல் * நிமோனியா, * சைனஸ் * காது கிருமி பாதிப்பு

    * நுரையீரல் பாதிப்பு * இருதய வீக்கம் * உறுப்புகள் பாதிப்பு என எழுத தவிர்க்கும் சில அச்சுறுத்தும் பாதிப்புகளும் ஏற்படலாம்.

    * மூச்சு விடுவதில் சிரமம் * வயிறு, நெஞ்சில் ஒரு அழுத்தம் * மயக்கம் *சிறுநீர் வெளி செல்லுதல் குறைவு * வாந்தி இருந்தாலோ, ஜூரம் திரும்ப வருவது போன்ற சில புதிய அறிகுறிகள் இருந்தாலோ தாமதமின்றி மருத்துவர் ஆலோசனை பெறுவதே அவசியம்.

    * ப்ளூ தவிர்ப்பு ஊசியினை யும் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வது நல்லது.

    மனித மூளைக்கும், உட லுக்கும், மனதிற்கும் பொழுது போக்குகள் அவசியம் என்று நினைக்கின்றோம். மருத்துவர்களும் அறிவுறுத்து கின்றனர். பொதுவாக பொழுது போக்கு என்பது வயதிற்கேற்ப மாறுபடும்.

    * விளையாட்டு

    * புகைப்படம் எடுத்தல்

    * புத்தகம் படித்தல் என பல பிரிவுகளில் இருக்கும். சமுதாயத்தோடு இணைந்த சில பொழுது போக்குகள் உள்ளன.

    * கூட்டு விளையாட்டு

    * கூட்டு நடனம்

    * கூட்டு உடற்பயிற்சி போன்றவை இதனுள் அடங்கும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா?

    * அன்றாடம் சமைக்கும் அம்மாவிற்கு அது பெரிய வேலை, சுமை. ஆனால் அவ்வப்போதாவது வீட்டில் உள்ள வர்கள் சமைத்தால் அது பொழுதுபோக்கு.

    * கிராம பகுதிகளில் இருப்பவர்கள் பறவைகளை பார்ப்பது, அதன் சத்தத்தினை ரசிப்பது பொழுதுபோக்கு.

    * இரவில் சிறிது நேரம் நட்சத்திரங்களை பார்த்து ரசிக்கலாம்.

    * சைக்கிளில் வெளியில் செல்லலாம்.

    * புது மொழி கற்கலாம்

    * தனி மனித உரிமை போன்ற சட்டங்களைப் படிக்கலாம்.

    * மீன் நீந்துவதனை பார்க்கும் போது மனம் அமைதிப்படும் என்பர்.


    கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள்

    * திடீரென எடை அதி கரிப்பது, பெருத்த வயிறு இருப்பது.

    * தொடர்ந்து சோர்வாக இருப்பது, பலவீன மாக இருப்பது

    * வயிற்று வலி குறிப்பாக வலது பக்க விலாவின் கீழ் இருப்பது

    * அடர் நிறம் கொண்ட சிறுநீர், வெளிர் நிற கழிவு வெளியேற்றம்

    * அதிக சர்க்கரை அளவு (ரத்தத்தில்)

    * ரத்த பரிசோதனையில் அதிக கொழுப்பு

    * சிறிய அடிபட்டால் கூட கருத்து விடுதல்

    * கண்களில் மஞ்சள்

    இவையெல்லாம் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறிகள் என்று அறிவோம்.


    * நவீன உலகில் அதிகம் நம்மை அறியாமல் மூழ்கினால் நமது உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியம் இன்மை ஏற்படும்.

    * நினைத்த நேரத்தில் கண்ட உணவு உண்பதை நீங்கள் நாகரீக வாழ்க்கை என்ற பெயரில் நோய்களுக்குள் சிக்கிக் கொண்டீர்கள் என்று கொள்ளலாம்.

    * எதற்கெடுத்தா லும் யாரையும் கேட்காமல் மருந்து களை தன் மனம் போனபடி எடுத்துக் கொள்வது நாகரீகமாகாது.

    * நான் சற்று கடை தெரு சுற்றி வந்தால் மனம் மகிழ்ச்சி அடையும் என்று நினைப்பது நாகரீகமா?

    * அதிக நேரம் டி.வி., போன் இவற்றில் மூழ்குபவர்கள். இவர்கள் நவீனம் என்ற பெயரில் உடல் நோய், மன நோய் இவற்றில் பாதிப்பினை பெறு கின்றார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    இதிலிருந்து ஒவ்வொருவரும் உறுதி எடுத்து வெளிவருவது மிக அவசியம்.

    வெறும் மருந்து, மாத்திரை என்றில்லாமல் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, தியானம் போன்ற பழக்கங்கள் முக்கியம். இந்த பழக்கங்கள் இல்லாமல் உடல் நலத்தினை பேணுவது கடினமே.

    ×