search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லீரல் பாதிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது.
    • நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

    மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. எளிதில் ஆவியாகக் கூடிய, தீப்பற்றக் கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் மட்டுமே நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட எந்திரங்களின் உறைநிலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

    ஆடை தயாரிப்பு, பெயிண்ட் உற்பத்தி, பிளாஸ்டிக் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் முக்கிய மூலப் பொருளாக மெத்தனால் பயன்படுகிறது. மை, பிசின்கள், பசைகள் மற்றும் சாயங்களை உருவாக்க உதவும் ஒரு தொழில்துறை கரைப்பானாக மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெட்ரோலில் கூட துணை பொருளாக மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.

    மெத்தனால் பயன்பாட்டிற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்கள் மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும். மேலும் மெத்தனாலை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க தனி அமைப்புகள் உள்ளன. தொழிற் காரணங்களை தவிர்த்து பிற வகையான பயன்பாட்டிற்கு மெத்தனாலை பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

    உயிரைப் பறிப்பது எப்படி?

    கள்ளச்சாராயத்திற்கும், விஷச்சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது.

    மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். தொழிற்துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மெத்தனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய விஷமாகும்.

    குறிப்பிட்ட அளவுக்கு மேல் இவற்றை உட்கொள்ளும் மனிதர்களின் நியூரான்களில் கலக்கும் போது உயிரிழப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. மேலும், இவை மூளையின் செல்களை அழிப்பதால் மெத்தனாலை உட்கொள்ளும் போது நிரந்தரமாக கண்பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் குறிப்பிட்ட தர நிா்ணயத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அதில் மெத்தனால் இருக்காது.

    ஆனால், சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் தயாரிக்கும்போது நொதி நிலையில் மெத்தனால் உருவாகக்கூடும். பொதுவாக ஒருவா் அருந்தும் சாராயத்தின் அளவில் 10 மில்லி லிட்டர் மெத்தனால் இருந்தாலே பாா்வை பறிபோய்விடும். அதுவே 40 மில்லி லிட்டருக்கு மேல் இருந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும். மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தினால் 12-ல் இருந்து 24 மணி நேரத்துக்குப் பிறகே அதன் விளைவுகள் வீரியமடையும்.

    வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், காது கேளாமை, பாா்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். மனித உடலில் மெத்தனால் கலந்தவுடன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது 'பாா்மால்டிஹைட்' என்ற நச்சு பொருளாக மாற்றமடையும். அதன் பின்னா் அது 'பாமிக்' அமிலாக மாறும்.

    இந்த வகையான அமிலம்தான் 'பாா்மாலின்' எனப்படும் திரவமாக மாற்றப்பட்டு இறந்தவா்களின் உடலை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறாக மெத்தனால் 'பாமிக்' அமிலாக மாறிவிட்டால் உடனடியாக நரம்பு மண்டலத்தைப் பாதித்து பாா்வை இழப்பு ஏற்படும்.

    அதன் தொடா்ச்சியாக, கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கும். பின்னா் மற்ற உறுப்புகளின் இயக்கமும் முடங்கக்கூடும்.

    இத்தகைய நிலையை எட்டுவதற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் உயிரைக் காப்பாற்றி விடலாம். ஆனாலும், எதிா்விளைவுகளாக பாா்வை இழப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள், நடுக்குவாதம் ஆகியவை வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருக்கும்.

    எனவே மெத்தனால் கலந்த சாராயம் குடித்தவர்கள் வாழ்நாள் முழுக்க நோயுடன் போராடும் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    • துரித உணவுகள் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது.
    • துரித உணவுகளில் அதிகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும்.

    தற்போதைய வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளே பெரும் இடத்தை பிடித்துள்ளன. அலுவலக பணி செய்பவர்கள் அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்றால், அங்கு அதிகரிப்படியாக நிறைந்திருப்பவை துரித உணவுகளாகவே இருக்கிறது. இன்று மட்டும்தான் என்று நாம் தினமும் எடுக்கும் சிறிய சிறிய துரித உணவுகள் கூட உங்கள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    வீட்டில் சமைப்பதை விட கொஞ்சம் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லாருக்குமே இருக்கும். அதனால்தான் ஹோட்டலுக்கு சென்று பர்கரோ அல்லது பீட்சாவோ சாப்பிடுகிறோம்.

    ஆனால், இதுபோன்ற துரித உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நம் உடல்நலத்தை மோசமாக பாதிக்கும். அதிக கலோரிகளை கொண்ட உணவையோ அல்லது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு குறைகிறது. நாளடைவில் இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome disease) வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், டயாபடீஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக ட்ரைகிளீசரைட், நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பது மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் வயிறு உப்புசம், சோர்வு, குடல் அழற்சி போன்றவை ஏற்படும்.

     துரித உணவுகள் சாப்பிடுவதால் பல வழிகளில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் பல மெடபாலிக் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது கல்லீரல். துரித உணவுகளில் அதிகமாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும். இது கல்லீரலை பெரிதாக்கி குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.

    இந்நோய் மோசமானால் சிரோசிஸ் தாக்கும் அபாயம் உள்ளது. துரித உணவுகளில் அதிகமாக இருக்கும் சுத்திகரிகப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைடரேட்ஸ் கல்லீரலில் அழற்சியை உண்டாக்குகிறது. மேலும் துரித உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தை தடை செய்கிறது.

    • ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர் வேண்டுகோள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சையது அபுல் ஹாசன் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள கடந்த 2017-18 ஆம் ஆண்டு மருத்து மாணவராக சேர்ந்து அதன் பின் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பின்னர் அவர் ஆன்லைன் கல்வி மூலமாகவே மருத்துவ கல்வியை முடித்து கடந்த 11-ந்தேதி மீண்டும் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றார்.

    அப்போது ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சீனாவில் உயிரிழந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கடந்த மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×