search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heaven’s Gate Opening"

    • மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது.
    • இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    சேலம்:

    மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாட்டியாலயாவின் பாரத நடன நிகழ்ச்சியும், 10 மணி முதல் பஜனையும் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 2.45 மணிக்கு திருமஞ்சனம் நீராட்டல் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரமும் 4.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்பு 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.

    அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சுகுமார்-வனிதா மணியம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் அறக்கட்டளைதாரர் மற்றும் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
    • அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பூதேவி,சமேத ஸ்ரீ அலமேலு உடனுறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சாமி கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.


    காட்டூர் பாண்டுரங்கர் கோவில்

    காட்டூர் பாண்டுரங்கர் கோவில்

    அதன் பின்னர் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு, அதன் வழியாக சுவாமி பல்லக்கில் எடுத்துவரப்பட்டார். அப்பொழுது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அதிகாலை முதலே பெரு மாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

    குமாரபாளையம்

    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதி காலையில் குமாரபா ளையத்தில் உள்ள பெரு மாள் கோவில்களில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், காட்டூர் பாண்டுரங்கர் கோவில், கோட்டை மேடு பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பரமபத வாசல் வழியே சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்க ளுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராசிபுரம்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பொன் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் முத்தங்கி கவச அலங்காரத்தில் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டபடி, பெருமாளை வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். பொன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஜனகல்யாண் இயக்கம் சார்பில் அதன் தலைவர் பரந்தாமன், செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

    • பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.
    • அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள

    பாகல்பட்டியில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமையான சென்றாய பெருமாள் கோவில். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவிலில் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. நேற்று சுவாமி திருக்கல்யாண உற்சவ வைபவம் நடை பெற்றது . இதில் சென்றாய பெருமாள் சமேத லட்சுமி அம்மாள் மற்றும் துளசி அம்மாள் கல்யாண வைப வம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ சென்றாய பெரு மாள் சுவாமி மாப்பிள்ளை கோலத்திலும் மற்றும் ஸ்ரீ லட்சுமியம்மாள் ஸ்ரீ துளசி அம்மாள் மண மகள் கோலத்திலும் அலங்க ரிக்கப்பட்டு திருமாங்கல்யம் கட்டப்பட்டு மாலை மாற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.

    இதில் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுக்களித்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து இன்று காலை 4.30 மணிக்கு

    பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பாகல்பட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று தொளசம்பட்டி சென்றாய பெருமாள் கோவிலிலும், ஓமலூர் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஓமலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல்வேறு பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×