என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்காரு அடிகளார்"

    • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக மங்கள இசை வாசிக்கப்பட்டு பக்தர்களின் கர ஒலியுடன் புத்தாண்டை வரவேற்று ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கர்நாடக மாநில ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

    இந்த புத்தாண்டையொட்டி ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

    பெங்களூர் ஜெய் தேவி மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மருத்துவ நிதியுதவி, சங்கரா புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம், 9 நபர்களுக்கு மடிக்கணினி, 18 நபர்களுக்கு தையல் இயந்திரம், 18 நபர்களுக்கு அறுவை சிகிச்சை எந்திரங்கள், 3 நபர்களுக்கு ஆட்டோக்கள், மருத்துவ மனைகளுக்கு நன்கொடைகள், சிறப்பு குழந்தைகளுக்கான அன்னை இல்லத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவிக்கான காசோலை உள்ளிட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த  நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் கலந்து கொண்டனர். 

    விழாவில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந் தில் குமார் தொடங்கி வைத்தார். 

    • வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.
    • முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83- வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டா ரெட்டியார், ஆன்மிக இயக்க வேள்விக் குழுவின் இணைச்செயலாளர் கோபி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தணிக்கை குழு இணைச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணைத்தலைவர் மன்மதன் அனைவரையும் வரவேற்றார். மறைமலை நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது. 7 மணி அளவில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் காலை 7:30 மணிக்கு மறைமலை நகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

    காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும்,இயற்கை வளம் பெறவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு மறைமலைநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 20 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிதிவண்டிகளும்,13 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களும்,13 சலவைப் பெட்டிகள், 15 பயிர் பூச்சி மருந்து தெளிப்பான்கள், 6 விவசாய கருவிகள் 200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை மறைமலை நகர் நகர மன்ற தலைவர் சண்முகம் கலந்து கொண்டு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது.
    • பக்தர்கள் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 52-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மங்கள இசையு டன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அலங்கா ரத்துடன் தீபாராதனை செய்து வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி சித்தர் பீட வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியை பக்தர்களுக்கு கஞ்சி கலயங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பல லட்சம் பக்தர்கள் கஞ்சி கலயங்களை கையில் சுமந்தபடி சென்று கருவறை முன்பாக ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு பின்னர் பள்ளி வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கொப்பரை பாத்திரத்தில் ஊற்றினர். அது சமத்துவ கஞ்சியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    காலை 9 மணி அளவில் அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதி பராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்திருந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து 10.15 மணியளவில் ஆதிபராசக்தி கருவறை முன்பு இருக்கும் சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பால் அபிஷேகம் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ரெயில்வே பொது மேலாளர் ஜெயந்த், முன்னாள் தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, முன்னாள் நீதிபதி முருகேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆடிப்பூர தினமான இன்று சனிக்கிழமை காலை 3 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கருவறை முன்பாக உள்ள சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    நிகழ்ச்சிகளில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், வேளாண்மை கல்லூரி தாளாளர் உமா தேவி ஜெய்கணேஷ், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில் குமார், டாக்டர் மதுமலர், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் வழிகாட்டு தலில் இயக்கத்தின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மன்றங்கள் மற்றும் சக்திபீடங்களை சார்ந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரஸ்வதி, சதாசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளதாக தகவல்.
    • ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவாக விளங்கியவர்.

    ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார்.

    ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.

    பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர்.

    மேல்மருவத்தூர் சித்தர் பீட கருவறையில் அபிஷேக ஆராதனை செய்ய பெண்களை அனுமதித்தவர் பங்காரு அடிகளார்.

    அவர், ஆதிபராசக்தி மருத்துவ கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவராக விளங்கி வந்தார்.

    பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர்.

    • பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.

    உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அடிகளாரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்து இருக்கிறார். உயிரிழந்த பங்காரு அடிகளாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் இரங்கல் செய்தியில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    இதே போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
    • மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் கண்ணரீ அஞ்சலி.

    ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், மு.க.ஸ்டலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் கண்ணரீ அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

    • பக்தர்கள் ஏராளமானோர் கண்ணரீ அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • மு.க.ஸ்டலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், மு.க.ஸ்டலின் நாளை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் கண்ணரீ அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நாளை நடைபெறவிருந்த நடைப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும்.
    • பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை, அறிவை விதைத்தார்.

    ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.

    உடல்நலக் குறைவால் உயிரிழந்த பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


    • ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி, கலாசார அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தவர்.
    • பங்காரு அடிகளாரின் மறைவை அடுத்து பக்தர்கள் பலர் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர்.

    சென்னை:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனரான பங்காரு அடிகளார் (வயது 82) இன்று காலமானார். நெஞ்சு சளி பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை காலமானார்.

    1941-ம் ஆண்டு மார்ச் 3-ல் பிறந்த அவர், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். கோவில் மற்றும் ஆன்மீகத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டு வந்தார். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி, கலாசார அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தவர்.

    இவரது சேவையை பாராட்டி 2019-ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார். அவரது மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பங்காரு அடிகளார் மறைந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன் என வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

    ஆன்மீக நிர்வாகத்தில் பெண்களை கொண்டு வந்தவர் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

    பங்காரு அடிகளாரின் மரணம் லட்சக்கணக்கான மக்களுக்கு பேரிழப்பு என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

    பக்தர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என பங்காரு அடிகளார் மறைவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

    பங்காரு அடிகளாரின் மறைவை அடுத்து பக்தர்கள் பலர் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர்.

    • கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்
    • நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்

    பக்தர்களால் "அம்மா" என்று அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார். ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    அவர் மரணம் அடைந்த செய்தி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேல்மருவத்தூர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அதேபோல், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

    இதற்கிடையே புதுச்சேரி ஆளுநகர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

    • அடிகளாரைப் பராசக்தியின் சொரூபமாகவே காணும் பக்தர்கள், அவரை ‘அம்மா’ என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.
    • பங்காரு அடிகளாருக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

    ஆன்மிகப் பணிவுடன், பல சமூகப் பணிகளையும் செய்து, பல லட்சக்கணக்கான பக்தர்களைப் பெற்றிருந்தவர் மேல் மருவத்தூர் சித்தர் பீடத் தலைவரான பங்காரு அடிகளார்.

    மேல் மருவத்தூரில் துரைசாமி நாயக்கர் குடும்பம் செல்வாக்கானது. அவருடைய மகன் கோபால் நாயக்கர், நிலக்கிழார். கோபால் நாயக்கர்-மீனாம்பாள் தம்பதி மகனாக, 3-3-1942-ல் பங்காரு அடிகளார் பிறந்தார். இளமையிலேயே பக்தி மிக்கவராக விளங்கினார்.

    சோத்துப்பாக்கம் ஆரம்ப பள்ளியிலும், அச்சிறுபாக்கம் உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி பயின்றார். பின்னர் செங்கல்பட்டில் உள்ள அரசினர் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். உடனடியாக ஆசிரியர் வேலை கிடைக்காததால், சொந்தக்காலில் நிற்க விரும்பி, எலக்ட்ரீஷியனாக, பஸ் கண்டக்டராக, பஞ்சாய்த்து காண்டிராக்டராக சில காலம் பணியாற்றினார். பிறகு அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

    1966-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மிக பயங்கரமான புயல் வீசியபோது, மேல் மருவத்தூரில் இருந்த பால்வடியும் அதிசய வேப்ப மரம் வேராடு சாய்ந்தது. அந்த மரத்தின் அடியில் இருந்த புற்று மழையினால் கரைந்து, சுயம்பு வெளிப்பட்டது. அதுவரை வேம்புக்கும், புற்றுக்கும் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்து வந்த கோபால் நாயக்கர், இப்போது அந்த சுயம்புக்கு எளிய நிலையில் கூரை வேய்ந்து வழிபாடு செய்யத்தொடங்கினார். இந்தநிலையில் 1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு செவ்வாய் அன்று பங்காரு அடிகளார் முதன்முதலாக அருள்வாக்கு கூறினார். அதன் பிறகு புகழ் பரவத் தொடங்கியது. மேல் மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது.

    ஓலை வேய்ந்த ஆதிபராசக்தி கோவில், எழில் மிகு ஆலயமாக எழுந்தது. ஆன்மிகத் துறையில், அடிகளார் பெரும் புரட்சியே செய்தார் எனலாம். கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை வழக்கத்தை மாற்றி, பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரை சேர்ந்த மன்றத்துப் பெண்மணிகள் பொறுப்பேற்று கோவிலைத் தூய்மைப்படுத்துவது, பக்தர்களுக்கு உணவு வழங்குவது போன்ற திருப்பணிகள் செய்ய வகை செய்தார்.

    அடிகளாரைப் பராசக்தியின் சொரூபமாகவே காணும் பக்தர்கள், அவரை 'அம்மா' என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.

    அடிகளாருக்கு 1968 செம்டம்பர் 4-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அவரை மணந்த லட்சுமி அம்மையார், உத்திரமேரூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஆசிரியைப் பயிற்சி பெற்று, கருங்குழி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர்.

    பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி முதல், இன்றைய அரசியல் தலைவர்கள் வரை, முக்கிய தலைவர்கள், பிரமுகர்களும் மேல்மருவத்தூர் வந்து அருளாசி பெற்று சென்றுள்ளனர்.

    30 ஆண்டுகளுக்கு முன், சிறிய குக்கிராமமாக விளங்கிய மேல்மருவத்தூர், இன்று ஒரு நகரமாக காட்சியளிக்கிறது.

    ஆதிபராசக்தி அறநிலை சார்பில் கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி முதலியவையும், மிக நவீன ஆஸ்பத்திரிகளும் நடத்தப்படுகின்றன.

    பங்காரு அடிகளாருக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

    அடிகளாருக்கு அன்பழகன், செந்தில்குமார் என்ற 2 மகன்களும், தேவி, உமாதேவி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.
    • பங்காரு அடிகளார் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

    சென்னை:

    ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

    அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

    இந்நிலையில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

    ×