என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பரிசுத்தொகுப்பு"

    • வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • அரி சியின் தரத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சிக்கு ட்பட்ட தனலட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 15-ந்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பினை வழங்கிட ஏதுவாக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன் அங்கு சென்று டோக்கன் பணியை ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில்:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழர் திருநா ளாம் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பு வழங்கப்படும் எனவும் கிராமப்புற ரேசன் கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்களுக்கும் நகர்புற ரேசன் கடைகளின் மூலம் 300 டோக்கன்கள் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மூலம் 3-ந் தேதி முதல் 8-ந்தேதி வரை வீடு வீடாக சென்று ரேசன் கடை விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கிடவும் 9.01.2023 முதல் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார். 

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 6,15,020 குடும்ப அட்டைத்தாரர்கள் 434 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என மொத்தம் 6,15,454 குடும்ப அட்டை தாரர்களுக்கு கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 982 முழுநேர ரேசன் கடைகள் 245 பகுதி நேர கடைகள் மகளிர் சுயதஉவிக்குழுவின் மூலம் இயங்கும் 27 முழுநேர கடைகள் என மொத்தம் 1,254 ரேசன் கடைகள் மூலம் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்குகின்றனர். மேலும் டோக்கன் வழங்கும் பணியினை கண்காணிக்கும் வகையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஒவ்வொரு நாளும் டோக்கன் வழங்கிய விவரத்தினை கூட்டுறவு த்துறை அலுவலருக்கு தெரிவி த்திடவும் உத்தர விட்டுள்ளார். எனவே குடும்ப அட்டை தாரர்கள் டோக்கனில் குறிப்பி டப்பட்டநாள் மற்றும் நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியிட்டு குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இதன் பின்னர் தனல ட்சுமி கார்டன் ரங்கநாதன் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் திரு நாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொ குப்பில் வழங்கப்படவுள்ள அரி சியின் தரத்தினை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் யசோதா தேவி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகா ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தேனி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
    • பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலைக்குட்பட்ட 57 ரேசன்கடைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டத்தில் கலெக்டர் முரளிதரன் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், தலா 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ரூபாய் 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகு ப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டத்தி ற்குட்பட்ட 79,781 குடும்ப அட்டைதாரர்களுக்கும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட 64,299 குடும்ப அட்டைதாரர்களு க்கும், பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட 71,820 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தேனி வட்டத்திற்குட்பட்ட 65,392 குடும்ப அட்டை தாரர்களுக்கும், உத்தம பாளையம் வட்டத்தி ற்குட்பட்ட 1,45,580 குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் என மொத்தம் 4,26,872 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக குடும்ப அட்டைதாரருக்கு தலா 1 கிலோ பச்சரிசி அரிசி 1 கிலோ சக்கரை, முழு கரும்பு ஒன்று மற்றும் ரூபாய் 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

    இப்பரிசுத்தொகு ப்பினை குடும்ப அட்டை தாரர்கள் வருகிற 12-ந்தேதி வரை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க ப்பட்டுள்ள டோக்கன் குறிப்பிட ப்பட்டுள்ள நாளில் நியாய விலைக்கடை யில் பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்ட நாளில் பெற இயலாதவர்கள் 13.01.2023 அன்று பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நியாய விலைக்கடை செயல்பட உத்தரவிடப்பட்டு ள்ளது.

    இந்நிகழ்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், துணைப்பதிவாளர் (பெரியகுளம்) ராஜாங்கம், துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) சேகர், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற த்தலைவர்ரேணுப்பிரியா, தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்சக்கரவர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் செல்லம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரி யகுளம் கூட்டுறவு பண்டகசாலைக்குட்பட்ட 57 ரேசன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது 4 ரேசன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவ தாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து அந்த கடைகளுக்கு நேரடியாக வந்த மாவட்ட கலெக்டர் முரளிதரன் பொருட்களை தரமாக வழங்க உத்தர விட்டார். இந்த ஆய்வின் போது வட்டவழங்கல் அலுவலர், பெரியகுளம் தாசில்தார் உள்பட அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும்.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும்.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல், 2ம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும், பிற்பகலில் 200 பேருக்கும் போக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசுத்தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசாரின் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
    • வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

    பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்து அவர், "கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவிட்டிருக்கிறோம். பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம்" என்றார்.

    • பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    கடந்த 9-ந் தேதி சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில் இயங்கிவரும் சைதாப்பேட்டை-11 நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாய விலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50 ஆயிரம் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
    • பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இலவச வேட்டி-சேலைகளும் ரேசனில் வழங்கப்படுகிறது.

    சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நியாய விலைக் கடடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் வரும் 25ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி 85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்று பயன்பெறுமாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    ×