search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்டீரியா"

    • உங்களை கொஞ்சி நாவால் வருட ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.
    • நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதிகள் உள்ளது.

    நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை, நிச்சயம் கொஞ்சி மகிழ்ந்திருப்பீர்கள். அதேபோல, உங்களது நாயும், உங்களோடு விளையாடி இருக்கும்.

    அதுசரி...! நாய்கள் ஏன் மனிதர்களை கொஞ்சி, முத்தம் கொடுக்கிறது, நாவால் வருடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா...? அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்.

    * குட்டி நாய்கள் பசிக்கும்போது, அதை வெளிப்படுத்த தெரியாமல், உரிமையாளரை கொஞ்சி நாவால் வருட ஆரம்பிக்குமாம். ஆகவே உங்கள் வீட்டில் குட்டி நாய் இருந்தால், அது உங்களை கொஞ்சி நாவால் வருட ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.

    * சில நேரங்களில் நாய்கள் தங்களது உணர்ச்சியை முத்தம் கொடுத்தும், நாவால் வருடுவதன் மூலமும் வெளிப்படுத்தும். உதாரணமாக, வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினாலும், கடைகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாலும் நாய்கள் ஓடி வந்து, உங்களை கொஞ்ச ஆரம்பிக்கும். ஏனெனில் அது உங்களை அவ்வளவு நேசிக்கிறது. ஆகவே நீங்கள் வந்த சந்தோஷத்தை கொஞ்சுவதன் மூலம் வெளிப்படுத்துகிறது.

    * நாய்களுக்கு காயம் அல்லது வலி இருந்தால், அதனை சரிசெய்ய, அது தம்மை தாமே நாவால் வருடிக்கொள்ளும். ஏனெனில் நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதிகள் உள்ளது. இருப்பினும் அதிகமாக நக்கும்போது, அது காயத்தை இன்னும் பெரியதாக்கிவிடும். எனவே நாய்கள் அப்படி காயத்தின் மீது நாவால் வருட ஆரம்பித்தால், உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    * மனிதர்களின் உடலில் சுரக்கும் உப்பின் சுவையானது நாய்களுக்கு பிடிக்கும். அதன் காரணமாகவும், நாய்கள் அவ்வப்போது நாவால் வருடுகின்றன.

    * நாய்கள் கூட மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும். இத்தகைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு, நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்துவதற்கு, நாய்கள் தம்மை தாமே நாவால் வருட ஆரம்பிக்கும்.

    • வாய் சுகாதாரத்தை சரியாக பேணாமல் இருப்பதால் பல் சொத்தை உருவாகிறது.
    • ஆயில் புல்லிங் செய்வதால் பற்கள் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கும்.

    பல் சொத்தை பிரச்சினை இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே மிக எளிதாக வந்து விடுகிறது. இதற்கு காரணம் அவர்கள் அதிகமாக சாப்பிடும் இனிப்பு மிட்டாய்கள், சாக்லெட், ஸ்டார்ச் நிறைந்த உணவுப்பொருள்கள் ஆகியவை தான். இந்த உணவுகளின் எஞ்சிய பகுதி பற்களில் ஒட்டிக் கொண்டு பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. வாயில் பாக்டீரியாக்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். இதேநிலை தான் பெரியவர்களுக்கும்.

    உணவு சாப்பிட்டதும் சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பது, வாய் சுகாதாரத்தை சரியாக பேணாமல் இருப்பது போன்றவற்றால் இந்த பிரச்சினை அதிகரிக்கும்.

    தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் பற்கள் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கும். பற்களில் பிளேக் படிவதைத் தடுக்கும். தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வதோடு பல் சொத்தையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்யும்.

    உணவுமுறையில் மாற்றம்

    பல் சொத்தைப் பிரச்சினை இருப்பவர்கள் அதன் தீவிரத்தைக் குறைப்தற்கு முதலில் செய்ய வேண்டியது உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது தான். சர்க்கரை சேர்த்த இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். சர்க்கரை சேர்த்து ஜூசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். கால்சியம் பற்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நம்முடைய உடலில் இன்பிளமேஷன்கள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

    சொத்தை பல், பல் வலி உள்ளிட்ட பல் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் இன்பிளமேஷன்களால் தான் உண்டாகிறது. அதனால் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஆயுர்வேதத்தில் காயகல்ப மூலிகைகளில் ஒன்றாக சொல்லப்படுவது நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தி பல் சொத்தை மற்றும் பல் வலியைச் சரிசெய்ய உதவி செய்யும். ஒரு கப் நீரில் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அந்த நீரை ஆறவைத்து அதை வாய்க் கொப்பளித்து வர பல் சொத்தை வேகமாக சரியாகும்.

    அதிமதுரம் மிகவும் இனிப்பான மூலிகை. அதனால் ஆயுர்வேதத்தில் எல்லா வகையான மருந்துகள் தயாரிப்பிலும் இந்த அதிமதுரத்தைச் சேர்ப்பார்கள். இதில் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அதிகம் என்பதால் இது பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அதிமதுரத்தைச் சேர்த்து கொதிக்க விட்டு, ஆறவிட்டு அந்த நீரால் வாய் கொப்பளித்து வர பல் சொத்தையில் உள்ள புழுக்களை வெளியேற்றும். நாளடைவில் பல் சொத்தையைச் சரிசெய்யும்.

    கற்றாழையில் ஆன்டி இன்பிளமேட்டரி, ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் பயோஆக்டிவ் பண்புகள் உடலில் ஏற்படும் கிருமித் தொற்றுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. அதில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும். கற்றாழை ஜெல்லை டூத் பேஸ்ட்டாக பயன்படுத்தி பல் துலக்கி வர வேகமாக பல் சொத்தை சரியாகும். அதேபோல கற்றாழையை ஜூசாக செய்து குடித்து வர பல் சொத்தை மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.

    கிரீன் டீயில் நிறைய ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. அதனால் கிரீன் டீ பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிற பல் சொத்தையைச் சரிசெய்ய உதவி செய்யும். அதோடு கிரீன் டியில் ஃப்ளூரைடும் அதிகமாக இருக்கிறது. இந்த ஃப்ளூரைடு என்பது பற்களைப் பாதுகாக்கவும் பல் சொத்தையைப் போக்கவும் உதவும் ஒரு வகை மினரல். அடிக்கடி கிரீன் குடிப்பது, கிரீன் டீ பேக்கை வைத்து சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர பல் பிரச்சினைகள் தீரும்.

    கிராம்பு காலங்காலமாக பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்காக நம்முடைய முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் பல் வலியைக் குறைக்கவும் பல் சொத்தையை சரிசெய்யவும் உதவி செய்யும். பல் சொத்தை மற்றும் பல் வலி பிரச்சினை உள்ளவர்கள் அந்த இடத்திலுள்ள வலியை குறைக்க கிராம்பு எண்ணையை பயன்படுத்தலாம்.

    • பம்பை நதியில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000க்கும் மேல் கடந்துள்ளது.
    • கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும்.

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதை வழியாக சன்னிதானம் செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, பல்வேறு இடங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராடி வருகின்றனர். இதுபோல அங்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், பம்பை நதியில் கோலிஃபார்ம் என்கிற பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது பம்பை நதியில் வாரத்திற்கு ஒரு முறை கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மொத்த கோலிஃபார்ம் மற்றும் பீக்கல் கோலிஃபார்ம் அளவு பரிசோதிக்கப்படுகிறது.

    இதில் கோலிஃபார்ம் என்பது மொத்த பாக்டீரியாக்களின் தொகுப்பாகும். மொத்த கோலிஃபார்மின் அளவு 500க்கு மேல் இருந்தால் குளிக்க உபயோகிக்க முடியாது. ஆனால், பம்பை நதியில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000க்கும் மேல் கடந்துள்ளது.

    இதற்கு, பம்பை நதியில் குளிப்பதும் அவர்களது ஆடைகளை ஆற்றிலேயே விட்டு செல்வதும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனால், பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த குள்ளார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    ×