என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.எல்.பி."

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி:

    பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது போதை பொருள் சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, தகவல் அளிக்க குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தினார்.

    அப்போது அவர் கூறுகையில், போதைப் பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டும், புகார் பெட்டி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

    ×