என் மலர்
நீங்கள் தேடியது "இலக்கிய கூட்டம்"
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இலக்கிய கூட்டம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை பேராசிரியர் ரூபாதேவி செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறையும், கோவில்பட்டி கம்பன் கழகமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலக்கியக் கூட்டம் நடந்தது.
முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கம்பன் கழக உறுப்பினர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதா ஜவஹர் ''கம்பன் நம் தோழன்'' என்ற தலைப்பிலும் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் தங்கசாமி ''கம்பனில் அறம்'' என்ற தலைப்பிலும், கடம்பூர் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சகுந்தலா ''கோசலையும் சுமித்திரையும்'' என்ற தலைப்பிலும் பேசினர்.
தமிழியல் துறைத்தலைவர் அமுதா வரவேற்றார். தமிழியல் துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி மகேசுவரி நன்றி கூறினார். இதில் காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் 800 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை பேராசிரியர் ரூபாதேவி செய்திருந்தார்.