என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mayor கேரம்"
- கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் 6 பேர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.
- தஞ்சையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கேரம் போட்டி நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கேரம் கழகத்தின் தலைவரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் தமிழ்நாடு கேரம் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கான சான்றிதழ்களை தமிழ்நாடு கேரம் கழக தலைவர் நாசர்கான், செயலாளர் இருதயம், பொருளாளர் கார்த்திகேயன், மண்டல செயலாளர்கள் மாரியப்பன், சிவக்குமார், சேலம் மாவட்ட கேரம் சங்க செயல் தலைவர் லாரன்ஸ், செயலாளர் டேனியல், தஞ்சை மாவட்ட கேரம் சங்க செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் மேயர் சண்.ராமநாதனிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுடெல்லியில் நடந்து முடிந்த 50-வது தேசிய சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் 6 பேர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளோடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெறவும், கேரம் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் கோரிக்கை வைக்க உள்ளோம்.
தஞ்சையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கேரம் போட்டி நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்