search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகுமுத்துமாரியம்மன் கோவில்"

    • சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.
    • 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதிகாலை 5.30 மணிக்கு 108 வேத விற்பன்னர்கள் பங்கு பெறும் மஹா யாக சாலை பூஜையும், கேரளா செண்டை மேளங்கள் முழங்க காலை 10 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.

    கோவில் தர்மகர்த்தா சிவன் பாண்டி தலையில் பானை வைத்து அம்மனாக நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றன. இத் திருவிழாவிற்காக சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி உள்ளனர். 10 நாட்களும் வில்லுப்பாட்டு, வாண வேடிக்கை மற்றும் மேள தாளங்களுடன் அம்மனுக்கு தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

    மேலும் இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக ளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×