என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "slug 296928"
- தஞ்சை கூட்டுறவு காலனியில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
- சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பின் கீழ் வார்டு தோறும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று 45-வது வார்டுக்கு உட்பட்ட கூட்டுறவு காலனி, உமா நகர், தஞ்சை கூட்டுறவு காலனியில் கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலங்கல் இட்டனர்.
இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் வீடு வீடாக சென்று கோலங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர்.
இதையடுத்து சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்பு வழங்கும் விழா கூட்டுறவு காலனி கற்பக விநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பரிசுகள் வழங்கினார்.
மேலும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.