search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்ருகன் சின்ஹா"

    • சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்- அனுராக் தாக்கூர்.
    • அனுராக் பேசியதை அனைவரும் கேட்க வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.

    மக்களவையில் ராகுல் காந்தி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது உரையாற்றினார். அப்போது பல்வேறு விசயங்கள் குறித்து மத்திய அரசை விமர்சனம் செய்தார். மேலும் ஆறு பேர் தாமரை வடிவிலான சக்கரவியூகம் அமைத்து நாட்டு மக்களை சிக்கவைத்துள்ளனர் எனக் கூறினார்.

    இதற்கு மந்திரியல்லாத பாஜக எம்.பி.யான அனுராக் தாக்கூர் பதில் அளித்தார். அப்போது தங்களது சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் எனக் குறிப்பிட்டார். இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.

    பின்னர் அனுராக் தாக்கூரின் பேச்சு அடங்கிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அனுராக் தாக்கூரை பாராட்டியிருந்தார்.

    இந்த நிலையில் நேருக்குநேர் ராகுல் காந்தியை பிரதமர் மோடியால் எதிர்கொள்ள முடியவில்லை என சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சத்ருகன சின்ஹா இது தொடர்பாக கூறுகையில் "அனுராக் தாக்கூர் பேசியது தவறானது. சக்தி வாய்ந்த, பிரபலமான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் சாதி பற்றி கேட்டது தவறானது. இதுபோன்று சாதி பற்றி நீங்கள் கேட்க முடியாது. அனுராக் தாக்கூரைப் புரியவைக்க முயற்சிக்கிறோம். மேலும் அவர் எங்களுக்கு சொந்தமானவர்.

    தற்போது இருப்பது முன்னதாக இருந்ததுபோன்ற எதிரக்கட்சி அல்ல. அதேபோல் மத்திய அரசும் முன்னர் இருந்தது போன்ற மத்திய அரசு அல்ல. எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் மோடியை எதிர்த்து பயங்கரமாக விமர்சனம் செய்தபோது அவரை நேருக்குநேர் பிரதமர் மோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இது ஒரு பலவீனமான அரசாங்கம். இப்படியே தொடர்ந்தால் பிரச்சனையாகிவிடும்" என்றார்.

    • பா.ஜ.க. கட்சி சார்பில் இருமுறை எம்.பி.யாக இருந்துள்ளார்.
    • கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.

    கொல்கத்தா :

    இந்தி நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், 'ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, சமீபகாலத்தில் நாடு கண்ட மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரை ஆகும். இதை, 1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அத்வானி நடத்திய ராமர் ரத யாத்திரையுடன் ஒப்பிடலாம்.

    தற்போது மக்கள் மத்தியில் மதிப்புமிக்க தலைவராய் உயர்ந்திருக்கிற ராகுல், இந்த யாத்திரைக்கு பின், எதிர்க்கட்சி முகாமில் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். அப்பதவியில் சிறப்பாக செயல்படக்கூடியவராகவும் அவர் தெரிகிறார்' என்றார்.

    ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை 3 மாதங்களில் சத்ருகன் சின்கா புகழ்ந்து கூறியிருப்பது இது 2-வது முறையாகும்.

    வாஜ்பாய்-அத்வானி காலத்தில் பா.ஜ.க.வின் நட்சத்திர பிரசார பேச்சாளராக விளங்கிய சத்ருகன் சின்கா, அக்கட்சி சார்பில் இருமுறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரசுக்கு இடம்பெயர்ந்த இவர், கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். மேற்கு வங்காளத்தின் அசன்சோல் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    ராகுல் காந்தியை பாராட்டியுள்ளதால் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, 'இதற்கு என் மவுனமே பதில்' என்று சத்ருகன் சின்கா கூறினார்.

    ×