என் மலர்
நீங்கள் தேடியது "ரிலீஸ்"
- தியேட்டர்களில் கட் அவுட் வைக்க அனுமதி மறுப்பு
- ரசிகர்கள் ஏமாற்றம்
நாகர்கோவில்:
பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் பொதுமக்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை யொட்டி விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகிறது.
இதையடுத்து விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் அஜித் இருவரது படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதே போல் அஜித் நடித்த துணிவு படமும் 2 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.
இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர் முன்பு கட் அவுட்கள் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 2 ரசிகர்களும் கட் அவுட்டு கள் வைக்க போலீசாரின் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்டனர்.அவர்களும் தியேட்டருக்கு வெளியே கட் அவுட் வைக்க அனுமதி மறுத்துள்ளனர்.
தியேட்டருக்குள் கட் அவுட் வைத்தால் அதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் தியேட்டர் நிர்வாகமே முழு பொறுப்பு என்று தெரிவித்தனர். இத னால் தியேட்டர் உரிமை யாளர்களும் கட்அவுட் வைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படு கிறது. வழக்கமாக புதிய படங்கள் வெளியானால் தியேட்டர்களின் வெளியே கட்அவுட்டுகள் வைப்பது வழக்கமாகும். ஆனால் தற்பொழுது கட்அவுட்டுகள் வைக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாகர்கோவிலில் விஜய் நடித்த வாரிசு படம் நாளை 11-ந்தேதி அதிகாலை 6.00 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதே போல் அஜித் நடித்த வாரிசு படம் நாளை காலை 7.30 மணிக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2 படத்திற் கான டிக்கெட்டுகளும் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாகர்கோவிலை தவிர்த்து வெள்ளிச்சந்தை, குழித்துறை பகுதியில் உள்ள தியேட்டர்களிலும் விஜய் அஜித் படங்கள் வெளியிடப்படுகிறது.
- இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
- ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார்.
மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்க, இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. ரிலீஸ் என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாக இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜெ லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
- மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
- இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.
'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.
இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் தேசிங்கு ராஜா, ஜீவா,வேதாளம், ஜில்லா உள்ளிட்ட படங்கள் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்தும் வெற்றி பெற்றார்.மேலும் 'விடுதலை' படத்தில் ஹிட் ஆனது. கடும் உடற்பயிற்சி செய்து 'சிக்ஸ் பேக்' உடலில் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது.இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி கூறியதாவது :-
விடுதலை- 2 படத்தில் என்னுடைய படப்பிடிப்புக்கான காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
'விடுதலை- 2' படத்திற்கு முன்னதாக 'கருடன்' படம் ரிலீஸ் ஆகி விடும். விடுதலை- 2 படம் போலவே 'கருடன்' படமும் ஒரு நல்ல படமாகும். இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.
தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை யாரும் அழைக்க வில்லை.படம் நடிப்பில் நான் 'பிஸி' ஆக இருக்கிறேன்''.என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் ஒரு மனிதனுக்கும் பேய்க்கும் இடையிலான தனித்துவமான காதல் கதையாகும்.
- இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது
'ரவுடி பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் ரெட்டி. தற்போது 'லவ் மீ - இப் யூ டேர்' என்ற ரொமாண்டிக் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். தில் ராஜு ' புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் அருண் பீமவரபு இயக்கி உள்ளார். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.இப்படம் ஒரு மனிதனுக்கும் பேய்க்கும் இடையிலான தனித்துவமான காதல் கதையாகும்.படக்காட்சிகளை பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 25 - ந்தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படம் விரைவில் தியேட்டரில் ரீலீஸ் ஆவதையொட்டி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'
- படே மியான் சோட் மியான்' படம் ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தோம்.
பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'
.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்துள்ளனர்,இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தபடம் தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது

இந்நிலையில் அபுதாபியில் இருக்கும் அக்ஷய் மற்றும் டைகர் இருவரும் இந்த படம் வெளியீடு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
படே மியான் சோட் மியான்' படம் ரம்ஜான் அன்று வெளியிடப்படும் என்று நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தோம். நாங்கள் எங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவோம்.
வருகிற 10 - ந்தேதி 'ரம்ஜான்' என ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏப்ரல் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

எனவே வருகிற 11- ந் தேதி'படே மியான் சோட் மியான்' படம் வெளியாகும். அன்றைய தினத்தில் திரையரங்குகளில் உங்களை சந்திப்போம் என தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26-ல் தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.
- 'காற்றின் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்டவருமான தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்
புதுமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஒரு நொடி'. இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபாஷங்கர், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படம் தயாரிப்பு பணிகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26-ல் தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், 'காற்றின் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்டவருமான தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படே மியான் சோட் மியான் படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது.
- மேலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை தொடங்கி உள்ளது
பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்தனர்.இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கினார்.
படே மியான் சோட் மியான்" படம் மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனதை கவரும் இடங்களில் படமாக்கப்பட்டது.

இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்தபடம் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 'ரிலீஸ்' செய்யப்பட்டது.
படே மியான் சோட் மியான் படம் வெளிட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடி வருகிறது. ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்து வருகின்றனர்.

மேலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையை தொடங்கி உள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் இந்தியா முழுவதும் ரூ.15.62 கோடி வசூல் சாதனை பெற்றுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரூ. 350 கோடி செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டது.
- கடந்த 10 நாட்களில் இதுவரை ரூ.88.25 கோடி வசூல் பெற்றுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்தனர்.இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கினார்.

படே மியான் சோட் மியான்" படம் மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனதை கவரும் இடங்களில் படமாக்கப்பட்டது.
இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ரூ. 350 கோடி செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11- ந்தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது.படே மியான் சோட் மியான் படம் வெளியிட்ட தியேட்டர்களில் முதல் சில நாட்கள் 'ஹவுஸ்புல்' காட்சிகளாக இப்படம் ஓடியது. ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்தனர்.
மேலும் இப்படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் சாதனையாக கடந்த 10 நாட்களில் இதுவரை ரூ.88.25 கோடி வசூல் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 10-ந்தேதி 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து இருந்தது.
- தயாரிப்பு குழு தற்போது 'ரிலீஸ்' தேதியை ஒத்தி வைத்து உள்ளது.
சின்னத்திரையில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் 2004- ம் ஆண்டு வெளியான 'மன்மதன்' படத்தின் மூலம் நடிகர் சிம்புவால் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து 'சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் காமெடிய நடிகராக கலக்கினார்
மேலும் சந்தானம். 2012-ம் ஆண்டு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2013-ல் :கண்ணா லட்டு திண்ண ஆசையா' படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் ஆனார்.

2014-ம் ஆண்டு ஸ்ரீநாத் இயக்கத்தில் வெளிவந்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் மூலம் முழுநேர கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் தொடர்ந்து ஹீரோவாகவே சந்தானம் நடித்து வருகிறார்.
சில படங்கள் வெற்றி பெற்றாலும், பல படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவில் வசூல் செய்ய வில்லை. இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இதைத் தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கினார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.
கோபுரம் பிலிம் புரொடக்ஷன் இந்த படத்தை தயாரித்துள்ளது. மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் இதில் நடித்து உள்ளனர்.

பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்கை' கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்டார். இப்படத்தின் டிரைலர் கடந்த 26 - ந்தேதி வெளியிடப்பட்டது.
இப்படம் வருகிற 10-ந்தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் பட தயாரிப்பு குழு தற்போது திடீரென 'ரிலீஸ்' தேதியை ஒத்தி வைத்து உள்ளது. மேலும் வருகிற 17- ந்தேதி (மே) தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என அறிவித்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தற்போது தயாராகி உள்ளது.
- ஜூன் 7 -ந் தேதி படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த 'மெளன ராகம்' படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.
இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதுப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தற்போது தயாராகி உள்ளது.

வருகிற ஜூன் 7 -ந் தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
- 'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார்
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் 'ஆச்சார்யா' படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.
'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சாயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தாய்லாந்தில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம்பெறும் மெலோடி பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக வரும் ஜூன் 17-ம் தேதி படக்குழு தாய்லாந்து செல்கின்றனர். ஜூலை மாதத்திற்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து பின்னணி பணிகளை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளனர். இப்படம் இரு பாகங்களாக வெளிவரவுள்ளது.
இப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் ஆனால் தற்பொழுது இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
- இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.