search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவணை"

    • தற்போது வன மேம்பாட்டுக் கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களைப் பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
    • யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாதந்தோறும் நடை திறக்கப்படும் நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சபரிமலையில் முக்கிய பண்டிகை காலமான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த ஆண்டு இந்த காலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டது. வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தற்போதே வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெறுவதற்கான பணிகள் நடைபெற்றன. பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான 19 மூலப்பொருட்களுக்கான டெண்டர் கோருவதற்கான நடைமுறைகள் ஏப்ரல் மாதம் தொடங்கி, அவற்றில் 16 பொருட்களின் ஏலம் தற்போது முடிவடைந்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    ஏலக்காய்களில் அதிகபட்ச எச்ச அளவு (எம்.ஆர்.எல்.) அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டதையடுத்து, தேவசம் போர்டு 'அரவணா' விற்பனை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வாரியத்துக்கு ரூ.6.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது போன்ற நிதி இழப்பு மற்றும் சர்ச்சைகளைத் தவிர்க்க, தற்போது வன மேம்பாட்டுக் கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களைப் பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த ஏஜென்சி ஒன்று கடந்த ஆண்டை விட குறைந்த விலையில் வழங்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரவணை டின்கள் மாளிகைபுரம் கோவிலுக்கு அருகே உள்ள குடோனில் தனியாக வைக்கப்பட்டன.
    • அரவணை தயாரித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையின்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அரவணை மற்றும் அப்பம் பிரசாரமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அரவணை பிரசாரத்தில் பூச்சி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது.

    இதையடுத்து பூச்சி மருந்து அதிகளவில் இருப்பதாக கூறப்பட்ட 6.65 லட்சம் டின் அரவணையை பக்தர்களுக்கு வழங்கக்கூடாது என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த அரவணை டின்கள் மாளிகைபுரம் கோவிலுக்கு அருகே உள்ள குடோனில் தனியாக வைக்கப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்தில், அரவணை சாப்பிட உகந்ததாக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அரவணை தயாரித்து 6 மாதத்திற்குள் மட்டுமே சாப்பிட உகந்ததாக இருக்கும். ஆனால் அந்த அரவணை தயாரித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த அரவணை டின்கள் குடோனிலேயே தனியாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அந்த அரவணை டின்களை அழிப்பது பற்றியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த அரவணைகளை உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தேவசம்போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட உள்ளது. டெண்டரில் பங்கேற்க ஏராளமான ஏஜென்சிகள் விரும்பம் தெரிவித்துள்ளன. டெண்டர் பணிகள் ஒரு வாரத்தில் முடியும். அதன்பிறகு அரவணை டின்கள் எடுத்துச் செல்லப்படும் என தெரிகிறது.

    • சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
    • தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை:

    சபரிமலையில் தினமும் தற்போது 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    மும்பையில் இருந்து சர்க்கரை வரத்து தாமதமானதால் அரவணை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அரவணை தட்டுப்பாடு ஏற்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யப்ப பக்தர்களுக்கு அரவணை பிரசாத வினியோகம் சீராக நடைபெற்று வருவதாக சபரிமலை செயல் அதிகாரி கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.

    • சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது.
    • ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது.

    திருவனந்தபுரம், ஜன. 12-

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் முக்கிய பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் இதனை வாங்கி வீட்டுக்கு வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இதனால் அரவணை பிரசாதம் டின்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் பிரசாதம் வாங்குவதை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடு இல்லாமல் இருக்க லட்சக்கணக்கான அரவணை டின்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அதிக வருவாயும் வருகிறது.

    இந்த நிலையில் அர வணையில் சேர்க்கப்ப டும் ஏலக்காய் தரம் குறைந்திருப்பதாகவும் அதில் பூச்சிக்கொல்லி மருந்து அளவு அதிகமாக இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அரவணை பிரசாதத்தை ஆய்வுக்கு உட்படுத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் நடத்த ப்பட்ட ஆய்வில், அரவணை தயாரிப்பில் தரமற்ற ஏலக்காய் பயன் படுத்தி இருப்பதும், அதில், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.

    இதற்கிடையில் 350 கிலோ அரவணையில் 750 கிராம் ஏலக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தப் பொருட் களில் வெறும் 0.20 சதவீதம் தான் என தெரிவிக்கப்ப ட்டது. மேலும் அர வணை 200 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால் அது தீங்கு விளைவிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஓத்தி வைக்கப்பட்டது.

    அதே நேரம் தரமற்ற ஏலக்காயில் தயாரிக்கப்பட்ட அரவணை விற்பனையை நிறுத்துமாறு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பிஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 6½ லட்சம் டின் அரவணைகள் வீணானது. இதன் மதிப்பு சுமார் ரூ.6½ கோடியாகும்.

    இதுகுறித்து திருவிதா ங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவுப்படி ஏற்க னவே தயாரித்து இருப்பு வைக்கப்ப ட்டிருந்த அரவணை விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது. 2½ லட்சம் டின்கள் அர வணையை ஓரே நேரத்தில் தயார் செய்யலாம். ஆர்கானிக் ஏலக்காயை கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். அப்படி கொள்முதல் செய்யப்பட்டால், அது அரவணை தயாரிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் நாம் முதலில் தரத்தை சரி பார்க்க வேண்டும் என்றார்.

    அதன்படி புதிதாக ஏலக்காய் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட அரவணை இன்று முதல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

    ×