search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் தனியாக வைக்கப்பட்டுள்ள 6.65 லட்சம் டின் அரவணையை உரமாக்க திட்டம்
    X

    சபரிமலையில் தனியாக வைக்கப்பட்டுள்ள 6.65 லட்சம் டின் அரவணையை உரமாக்க திட்டம்

    • அரவணை டின்கள் மாளிகைபுரம் கோவிலுக்கு அருகே உள்ள குடோனில் தனியாக வைக்கப்பட்டன.
    • அரவணை தயாரித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையின்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அரவணை மற்றும் அப்பம் பிரசாரமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அரவணை பிரசாரத்தில் பூச்சி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது.

    இதையடுத்து பூச்சி மருந்து அதிகளவில் இருப்பதாக கூறப்பட்ட 6.65 லட்சம் டின் அரவணையை பக்தர்களுக்கு வழங்கக்கூடாது என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த அரவணை டின்கள் மாளிகைபுரம் கோவிலுக்கு அருகே உள்ள குடோனில் தனியாக வைக்கப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்தில், அரவணை சாப்பிட உகந்ததாக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அரவணை தயாரித்து 6 மாதத்திற்குள் மட்டுமே சாப்பிட உகந்ததாக இருக்கும். ஆனால் அந்த அரவணை தயாரித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த அரவணை டின்கள் குடோனிலேயே தனியாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அந்த அரவணை டின்களை அழிப்பது பற்றியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த அரவணைகளை உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தேவசம்போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட உள்ளது. டெண்டரில் பங்கேற்க ஏராளமான ஏஜென்சிகள் விரும்பம் தெரிவித்துள்ளன. டெண்டர் பணிகள் ஒரு வாரத்தில் முடியும். அதன்பிறகு அரவணை டின்கள் எடுத்துச் செல்லப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×